Tuesday, July 6, 2010

இலங்கை: பிணமென்றே பெயர் வைத்தேன் – வித்யாசாகர்

Source:http://meenakam.com/tamilpoems/?p=50


பிணங்களின் எரியும் புகையில்
புகுகிறது பள்ளி சீருடைகள்;

பிணங்களின் அழுகிய நாற்றத்தில்
மறந்தன மரண பயம்;

பிணங்களின் முறிந்த உறுப்பில்
முடங்கின உயிர் பறித்த வலி;

பிணங்களின் தெருவோர குவியலில்
அறுந்தன உயிரின் ஆசை;


பிணங்களின் பிணமென்னும் பெயரில்
கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;


பிணமென்றே பெயர்வைத்தேன்
வேறென்ன எம்மக்கள் -
பிணமாகிப் போகவே படைத்தாயே?

வெடித்த குண்டுகள் வீரம் பேச
உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக
பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -
ஈக்கள் மொய்க்க..,

எலும்பு கடித்து நாய்கள் திரிய..,
உடம்பு காட்டி
என் தமிழச்சிகள் கருக..,
வெட்டிசாய்த்த மரம் போல -
எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?


பற்றி எரிகிறது மனம்
வெறும் படமென்று எண்ணி
உச்சு கொட்டி போகிறது உலகம்

மறந்தோர் மறந்து
வலித்த உணர்வுகளையும் தொலைத்து
மிச்சம் மீதிக்காய் அழுது -
வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்;

வேறென்ன சொல்ல எமை -
முடிவில் -
பிணமென்றே பெயர் வைத்தேன்; அதில்
என்னையும் பூட்டிவைத்தேன்!!

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...