Tuesday, February 16, 2010

“உண்மையில் உலகம் விடுதலைப்புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை”: பேராசிரியர் அடேல் பார்க்கர்

விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை “Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka” என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது.

ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது. போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது” எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது, “உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன. விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,

பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.

“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள்.

பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள். இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.

Adele Parker Visiting Assistant Professor

(Ph.D Brown University)

aparker@holycross.edu

www.holycross.edu
Source: http://meenakam.com/?p=6456#more-6456

DINAKARAN LAND SCAM: Report in a week, says SoI team head

Published on Feb 16 in New Indian Express.

TIRUVALLUR: The three-member Survey of India (SoI) team appointed by the Centre to probe the land grabbing charges against Karnataka High Court Chief Justice P D Dinakaran is all set to file its detailed report in a week’s time.

Briefing reporters after meeting Dinakaran’s wife Vinodhini and district officials including the Tiruvallur Collector V Palanikumar during an enquiry at remote Thiruvalangadu here on Monday, Major General Shiva Kumar, who heads the survey team, said, “We will go through all the records and various documents submitted by the district administration and villagers, and will relate it to the map. We will finalise the map in a week’s time and submit it to the secretary of Union Science and Technology Ministry.” “The views of the district administration and the local villagers would be taken into account before finalising the map,” he said.

Seeking to play down the accusation of bias in favour of Justice Dinakaran levelled by All India Kisan Sabha affiliated to CPM, Shiva Kumar said, “We are not supporting anybody. We have a brand value (Survey of India), we will live up to it.”
To a question on whether the map would contain the portion of fencing removed allegedly by Justice Dinakaran in the wake of allegations of encroachment, he said, “We don’t believe in Collector’s map or somebody’s map, we will make our own map. We have prepared our own map based on whatever exists on the ground at present. We will analyse them and intelligently put it in the map.”
Meanwhile, it is reliably learnt that Vellore District Revenue Officer Saravanavelraj submitted a report with the SoI team on Monday alleging that Justice Dinakaran had encroached about 1.75 acres of land distributed to two beneficiaries under the Tamil Nadu Government’s Wasteland Distribution to families of poor landless farmers scheme.

Justice Dinakaran’s wife appears before panel

By G Saravanan
Published on Feb 16:

TIRUVALLUR: Even though the three-member Survey of India team allotted two hours to the Karnataka High Court Chief Justice P D Dinakaran to present his version of a case in which he faces serious allegations of land encroachment at Kaverirajapuram, Justice Dinkaran did not show up. Instead, it was his wife Dr Vinodhini who appeared before the panel here on Monday.

The team of officials is camping in Thiruvalangadu, to finalise the mapping process of the disputed stretches of land, allegedly encroached upon by Justice Dinakaran.

It is learnt that Dr Vinodhini submitted documents to the Survey of India officials and claimed that her family was innocent.
Meanwhile, police stationed at the site prevented the media from speaking to Dr Vinodhini when she left the venue after deposing before the team.

The hide-and-seek drama between the police and the media was played once again when Tiruvallur District Collector V Palanikumar reached the spot to present the district administration’s version of the encroachment allegations.
The media was once again prevented from geeting close to him and he was literally whisked away by police through a backdoor after presenting documents showing the alleged encroachments by Dinakaran.

In a related development, a group of local people from Kaverirajapuram who were denied an opportunity to meet the official team to present their views on the encroachment, charged that the team was favouring Justice Dinakaran and that this veil of secrecy indicated it.

The enquiry should be public, and not allowing local people to present their details of the encroachment shows the team’s biased approach, a local told Express.

Wednesday, February 10, 2010

தமிழக அரசியல்வாதிகள் தமிழகரசின் முள்வேலிக்குள் இருக்கும் எமது உறவுகளையாவது மீட்பார்களா?

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் ஒரு இரவில் பலசித்திரவதைகளை அனுபவித்து தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் மீது அயல் நாட்டார் சட்டம் பாய்ந்துள்ளது. சிறிலங்காவின் முற்கம்பி வேலுக்குள் இருக்கும் மக்களை தான் தமிழக அரசியல் வாதிகளால் காப்பாற்றமுடியவில்லை. தமிழகரசின் முள்வேலிக்குள் இருக்கும் எமது உறவுகளையாவது மீட்பார்களா? என்ற ஏக்கத்துடன் வேலுர் சிறையில் காத்திருக்கும் மக்கள் விடுக்கும் அன்பு வேண்டுகோள்

மதிப்பிற்குரிய ஐயா,

நான் அனைவரும் இலங்கையில் ஏற்பட்ட இனவெறி யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் வந்து அகதிமுகாம்களிலும் திறந்தவெளி அகதிமுகாம்களிலும் முறையாக பதிவு செய்து வாழ்ந்து வந்த எம்மை குரோதம் காரணமாகவும் சந்தேகத்தின் பேரிலும் கியூபிரிவு காவற்துறையினர் கைது செய்து பலதரப்பட்ட வழக்குகளை எம்மீது ஜோடித்து புழல், திருச்சி, மதுரை ஆகிய சிறைகளில் அவரவர் இடத்திற்கேற்றால் போல் அடைக்கப்பட்டோம். பின் பல சிரமங்களிற்கு மத்தியிலும் பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் பல இலட்சங்கள் ரூபாய் வரை செலவழித்து எமது குடும்பத்தார் பிணையில் எடுத்தார்கள். பிணையில் வெளி வந்தவர்களையும் வழக்கு முடிந்து வந்தவர்களையும் சிறைவாசலில் வைத்தே மீண்டும் கியூபிரிவு காவற்துறையினர் கைது செய்து அயல் நாட்டார் சட்டமான (3-2) வெளியில் வாழமுடியாத சட்டத்தினை எம்மீது திணித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு எனும் கிளைச்சிறைச்சிறையில் அடைக்கப்பட்டோம்.

அயல் நாட்டார் சட்டம் என்பது, ஒரு சிங்களவனுக்கு அல்லது பிற நாட்டவனுக்கோ பெரும்பாலும் பயன்படுத்துவது கிடையாது. அனால், ஈழத்தமிழனுக்கு அகதியாக வந்து அகதியாக அங்கீகரிக்கப்பட்டு வெளிப்பதிவில் வாழ அனுமதிக்கப்பட்டு சகல பதிவுகளுடன் இருந்தும் பல வருடங்களாக வாழ்ந்தவனையும் மன விரோதம் காரணமாக உள்நோக்கத்துடன் எந்தவித தயவு தாட்சனம் இன்றி கைது செய்து அயல் நாட்டார் சட்டம் பயன்படுத்தி சிறையில் அடைத்துவிடுகின்றார்கள்.

செங்கல்பட்டு கிளைச் சிறையில் இருந்தும் எம்மில் பல பேருக்கு பலவருட காலமாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் அதேபோல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவரிகளுக்கு முறையாக குறிப்பிட்ட திகதியில் வழிக்காவல் துணையுடன் நீதிமன்றம் அழைத்துச் செல்வதிலும் தாமதங்கள் ஏற்படுத்தி, பல பேரை அழைத்து செல்லாமல் பிடிவாரண்ட் போட செய்து திரும்பவும் அவர்கள் முதலில் அடைக்கப்பட்ட அதே சிறையில் அடைத்து வைப்பதிலும் பல கஸ்டங்களை உண்டு பண்ணி மனழுத்தத்தை தந்து குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேலாக எம்மீது அமர்த்தப்பட்ட வழக்குகள் நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு பலவருடங்களாக எம் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் நாங்கள் அனைவரும் எமது விடுதலையை வலியுறுத்தி அதாவது எம்மில் பல பேரின் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் திறந்தவெளி முகாம்களில் வசிக்கின்றார்கள். அவர்களுடன் வெளியில் நாமும் தங்கியிருந்து எம்மீது அவர்த்தப்பட்டு இருக்கும் வழக்குகளை முடிக்கிறோம் என்பதை கோரிக்கையாக வைத்து கடந்த 2009 ஜூலை மாதம் ஏழுநாட்கள் உண்ணாவிரம் இருந்தோம். இதில் ஒரு சில நாட்களில் மட்டுமே ஒரு சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். (எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கு தகுந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை) ஏழாவது நாளில் ஒரு சில அதிகாரிகள் வருகை தந்து உங்களை விடுதலை செய்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும் இரண்டு மாதத்திற்குள் உங்கள் விடுதலைக்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் நம்பிக்கை வார்த்தைகள் அளித்தமையால் எமது உண்ணாவிரத போராட்டத்தை ஏழாவது நாளில் கைவிட்டோம்.

ஆனால், எமக்கு அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வாக்கு நிறைவேறாத பட்சத்தில் நாம் மீண்டும் 20.09.09 அன்று முன்னர் குறிப்பிட்ட கோரிக்கைகளை வைத்தே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம். இந்த உண்ணாவிரத போராட்டத்திலும் கைவிடும்படி வலியுறுத்தினார்களே தவிர எமது கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இதனால், பத்தாவது நாளிலும் பன்னிரண்டாவது நாளிலும் உண்ணாவிரதம் இருந்த ஏழுபேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அதன்பின்னர், மீதமுள்ளவர்கள் நீராகாரம் எதுவும் அருந்தாமல் மூன்று நாட்கள் இருந்தபோது குறிப்பிட்ட அதிகாரிகள் சிலர் வந்து முன்னர் இருந்த உண்ணாவிரதத்தில் கூறியது போல் இரண்டாவது உண்ணாவிரத போராட்டத்திலும் எமது வழக்குகள் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி மூன்று மாதத்திற்குள் நல்ல முடிவு கூறுவதாக அவகாரம் கொடுக்கப்பட்டது.

திரும்பவும் எமக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காதபட்சத்தில் கடந்த 18.01.10 அன்று நாம் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் நாம் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் போது தான் ஒரு சில அதிகாரிகள் முகாமை வந்து பார்வையிடுவது வழக்கம். இதற்காக எமது வழக்குகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைப்பதற்காக உண்ணாவிரதம் இருந்த மூன்றாவது நாள் 20.01.10 அன்று நாம் எமது முகாம் கதவை அடைத்து பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தாமல் எமது உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். இதன் பலனாக பல அதிகாரிகள் வருகை தந்து எமது கோரிக்கைகளை ஏற்று பத்து நாட்களில் தீர்வு சொல்வதாக கூறிச்சென்றனர். (முதல் மூன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஏமாற்றப்பட்டது போல) பின்னர் 01.02.10 அன்று நான்காவது உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் உண்ணாவிரதம் இருந்து இரண்டாவது நாள் நகரகாவல் அதிகாரியான ஆல்பிரட் வின்சன் என்பவர் எமது கோரிக்கைகளை எதுவும் நிறைவேறாது என்று கூறியதால் நாம் மனமுடைந்த நிலையில் நாம் அனைத்தும் மீண்டுமொரு உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். 02.02.10 அன்று மாலையளவில் காவலர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் விளைவிக்காமல் முகாமினுள் உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம்.

எமது போராட்டத்தை ஏற்காமல் கொச்சைப்படுத்தும் விதத்தில் திடீரென்று எமது முகாம் அவர் மீது ஏணி வைத்து ஏறி எ.எஸ்.பி சேவியர் தன்ராஜ் தலைமையில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் (இருபத்தைந்து பேர் சாதாரண உடையணிந்த காவலர்கள் மற்றும் கியூபிரிவினர் உட்பட) எமது முகாமிற்குள் இறங்கி அதாவது ஏற்கனவே திட்டமிட்டது போல் எந்தவித ஒரு பேச்சுக்கும் இடமளிக்காமல் அவர்கள் கொண்டுவந்த லத்தி உருட்டுக்கட்டைகளால் முகாமில் இருந்த பல பேருக்கு இரத்தகாயங்கள் ஏற்படும் அளவுக்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டோம். இதனால் நாம் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு எமது அறைகளுக்குள் ஓடி ஒழிந்த போது, கியூபிரிவு குமார் என்பவரால் அடையாளம் காட்டப்பட்டு எம்மை எமது அறையில் இருந்து பலவந்தமாக வெளியில் இழுத்துப்போட்டு அடித்து உதைத்து முகாம் முற்றத்தில் உள்ள மரத்தடியில் முட்டிபோட்டு உட்கார வைத்தனர். பின்னர் ஒவ்வொருவரின் பெயர்களை தனித்தனியாக அழைத்து எம்மை சுற்று சுமாராக பத்து காவலர்கள் (சேவியர் தன்ராஜ் – எ.எஸ்.பி, நகரகாவல் அதிகாரி அல்பிரட்வின்சன் பதில் அதிகாரி, ராஜேந்திர பிரசாத் ஓட்டுனர் ரமேஷ், முனியாண்டி, எஸ்.பி ஏட்டு, அன்று முகாம் கடமையில் இருந்த அதிகாரி அவருடன் இருந்த காவலர்கள், எஸ்.ஐ கியூபிரிவு கவாலர், எ.ஏஸ்.பி. காவலர்கள்,எஸ்.பி காவலர்கள்) சுற்றி நின்று கதறக்கதற ஜீரணிக்க முடியாத பிறப்பை இழுவுபடுத்தும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் (அக்கா,அம்மா,தங்கை,மனைவி,போன்றோர்களை சம்மந்தபடுத்தி) திட்டி அடித்தனர். அதுமட்டும் இன்றி சில பேர் போதையிலும் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள் என்று கூட பாராமல் தலையிலும் ரமணன் என்பவதுக்கு உக்காரவைத்து அவரது ஆண்குறியிலும் பூட்ஸ் காலால் மிதித்த் அடித்தார்கள்.
நாம் விடுதலை கேட்பதற்காகவும் குற்றப்பத்திர்கை தாக்கல் செய்யச்சொல்லி கேட்டதற்காகவும் மருத்துவமனை சென்றுவர வழிக்காவல் கேட்டதற்காகவும் தாம் அனைவரும் அடிப்பதாக காரணம் சொன்னார்கள். அடித்ததோடு மட்டுமல்லாமல் “நீங்கள் அனைவரும் இரண்டு வருடத்திற்கு வெளியில் வராதபடி ஓர் வழக்கையும் தொடரப்போவதா ” கூறி எம்மீது பொய்யான வழக்கை தாராளமாக பல பிரிவுகளில் பதிவு செய்தார்கள்.

பின்னர், பெயர்களை அழைத்து அடித்து உதைத்த பின்னர் எம்மை உட்கார வைத்துவிட்டு எமது உடமைகள் அனைத்தையும் எம் கண்முன்னே சூறையாடி எம்மை உட்கார வைத்து மாறி மாறி எந்தவித கேள்வியும் இன்றி மாறிமாறி அடித்தனர். அதாவது இரவு 7.30 தொடக்கம் அதிகாலை 2.30 மணிவரை இந்த துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டு இருந்தது. பின்னர் எங்களை காவலர்களின் வாகனத்தில் ஏற அழைத்துச் செல்லும் போது எம்மை வரிசையில் விட்டு இரண்டு கரையில் காவலர்கள் நின்று கொண்டு அடித்து அடித்தே ஏற்றினர்கள். இச்சம்பவம் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையிலேயே நடந்தது. இந்த தாசில்தார் எமது ஒவ்வொரு உண்ணாவிரத போராட்டத்திலும் வந்து வாக்குறுதிகள் தருவார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைவிலங்கிட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காவலர்கள் அடித்த விபரங்களை கூறக்கூடாது என்று லத்தியாலும் பூட்ஸ் காலாலும் அடித்து உதைத்தே மருத்துவரிடம் கூட்டிச்சென்றார்கள். பி.பி மட்டுமே பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள். பின்னர் 03.02.10 அதிகாலை செங்கல்பட்டு ஜே.எம்.ஐ நீதிமன்ற நீதிபதி அவர்கள் முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது நாம் அணிந்திருந்த காலணிகள் அனைத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து பறித்து எறிந்து விட்டுத்தான் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். அதே நேரம் நீதிபதி அவர்களும் எம் அனைவரையும் எந்த கேள்விகளும் கேட்கவில்லை. எம்மை கூட்டிச்சென்ற காவலர்களும் எமது கையில் விலங்கிட்ட விலங்கை கழட்டி வலப்பக்கம் (எம்மில் ஒரு சிலரிடம்) அழுத்தி பிடித்து எதுவும் நீதிபதியிடம் கூறக்கூடாது. மீறி கூறினால் வாகனத்தில் வைத்து எமது கால்களை உடைப்போம் என்று மிரட்டினார்கள். அதனில் எமக்கு நடந்த கொடூர சம்பத்தை நீதிபதி முன் கூற முடியவில்லை. நீதிபதி முன் ஆஜர்படுத்தி கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றிய பின்னரும் எம் அனைவரையும் அடித்து துன்புறுத்தி கையொப்பம் இட வற்புறுத்தி சில பத்திரங்களில் கையொப்பம் பெற்றார்கள் அதோடு எம்மை ஏற்றிய வாகனம் புழல் மத்திய சிறைக்கு சென்று கொண்டிருந்த போது எமது எமது உள்ளாடைகளை கழட்டிவீசும்படி அடித்தார்கள். புழல் மத்திய சிறையில் சிங்கள மீனவர்கள் இருப்பதால் எமக்கும் அவர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படும் என்று அங்கு அடைக்காமல் பின்னர் திரும்ப வேலூர் சிறையை நோக்கி எம்மை கொண்டு வரும்போது எம்மில் ஒரு சிலர் உண்ணாவிரதம் இருந்ததனால் மிகவும் சோர்வாக இருந்தார்கள் அவர்களுக்கும் ஒரு சொட்டு தண்ணீரோ சாப்பாடோ எதுவும் கொடுக்கவில்லை. எம் கையில் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டார்கள். இதுமட்டும் இன்றி எம்மில் ஒரு சிலரில் சோர்வாக சாய்ந்தவர்களை அடித்து அடித்தே வேலூர் சிறையை நோக்கி கொண்டு வந்து பகல் 12 மணியளவில் சிறையில் இறக்கிவிட்டார்கள்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவை யாதெனில் இதுவரை விடுதலை செய்யப்பட்டவர்களில் கடந்த உண்ணாவிரதங்களில் மிக தீவிரமாக முன்னின்று நடத்தியவர்கள் யாரும் (பழிவாங்கும் நோக்குடன்) விடுதலை செய்யப்படவில்லை. அதே நேரம் இச்சம்பவத்தில் பழைய உண்ணாவிரத போராட்டத்தில் முன்னின்று நடத்தியவர்கள் பெயர் சொல்லி அழைத்து அடித்து துன்புறுத்தினார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.

எம்மை அடித்தால் எமக்காக எந்த நாய் குரல் கொடுக்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லி சொல்லி அடித்தார்கள். இதனால் இவர்கள் கூறிய இக்கூற்றை தயவு செய்து உண்மையாக்கிடாதீர்கள்.

நீங்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து கொண்டு வவுனியாவில் இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களின் முற்கம்பி வேலியை அகற்ற முடியவில்லை. அவர்களை விடுதலை செய்து காப்பாற்ற முடியவில்லை. செங்கல்பட்டில் உறவுகள் இழந்து, உடமைகள் இழந்து, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமை நிராகரிக்கப்பட்டு, பெரும் துயரங்களுடன் வாழும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளை அடைத்து வைத்திருக்கும் முற்கம்பி வேலியையாவது அகற்றிவிடுங்கள்.

நாட்டில் நடந்தேறிய இறுதி கொடிய இராணுவ நடவடிக்கை காரணமாக எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் பட்ட அவலங்களை போல் ஒரே இரவில் எமது பொருட்கள் சூறையாடப்பட்டு அனாதைகளாக பொய்வழக்குகள் போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். நாம் அங்கு அனுபவிக்க தவறிய துன்பங்களை இங்கு அனுபவித்து விட்டோம்.

அன்பான உறவுகளே! எமது இந்த துன்ப துயரத்திற்கு பிறகாவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு மட்டும் பயன்படுத்தப்படும் அயல் நாட்டார் சட்டத்தில் (3(12) இருந்து விடுதலை பெற அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆவன செய்து எம்மை வந்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வேலூர் சிறையில் காத்திருக்கின்றோம்

Read more: http://meenakam.com/?p=5641#more-5641#ixzz0f8odZQMb

Tuesday, February 9, 2010

Mega road projects connecting Chennai Port to be completed in two years: G K Vasan


Mega road projects connecting Chennai Port to be completed in two years: G K Vasan

Chennai, February 8:
Putting a brave face to counter the ‘anti-customer friendly image’ of Chennai Port due to its poor infrastructure for export and import trades, Union Minister for Shipping G K Vasan on Monday announced that the Ennore-Manali Road Improvement Project (EMRIP) and the controversial War Memorial-Maduravoyal Elevated Expressway would be completed within two years.


Briefing reporters after a review meeting here, which was reportedly very stormy as participating stake holders blamed each other for the projects’ inordinate delay, the Minister said, “In the joint meeting, all the issues relating to the two projects were discussed comprehensively to ensure that any outstanding issues are sorted out at the earliest.”


Besides Union Shipping Minister Vasan, State Highways and Minor Ports Minister Saminathan, officials from Ministry of Shipping and National Highway Authority of India (NHAI), and chairmen of Chennai Port Trust and Ennore Port participated in the review meeting.

It may be noted that the two main container terminal operators in the Chennai Port, Chennai Container Terminal Limited (CCTL) and Chennai International Terminals Private Limited (CITPL) and who suffers a lot due to poor road connectivity, were not invited for the all important review meeting.
While Elevated Expressway project was pending for more than a year despite Prime Minister's dramatic inauguration in January 2009, EMRIP roadlink was pending for the last 14 years mainly due to official apathy
.
Though Minister Vasan was evasive on a timeframe for finishing these mega projects initially, he said, “All other agencies concerned have also assured to put in their best efforts for the speedy completion and it will take about two years to complete these projects.”
He also announced that both the projects would be toll roads. Though the War Memorial-Maduravoyal Elevated Expressway had been already declared as a tolled roadway, it may be noted that the Minister for the first time revealed that the EMRIP roadlink would also be a tolled one.
Reacting to a question on environmental clearance to Elevated Expressway, Vasan said, “We are hopeful that a positive note will be given by the government for the project.”
Since these two important connectivity projects are delayed inordinately, importers and exporters are now turning to fast-developing neighbouring Krishnapatnam Port, located 180 kilometres from Chennai Port.
With the Chennai Port failing to understand its customers’ need, the private port started attracting bulk cargoes from Chennai. The port’s declining status is evident from the statistics where it earlier used to handle about 1.5 lakh metric tonnes of several rough granite blocks every month, but its has been now fully shifted to Krishnapatnam Port.
Eom.Saravanan

Monday, February 8, 2010

FALSE NEWS BY SURVIVAL INTERNATIONAL ON ANDAMANESE TRIBE..

Extinct: Andaman tribe’s extermination complete as last member dies

The last member of a unique tribe has died on India’s Andaman Islands.
FALSE, FALSE, FALSE: THOUTH THE LADY WAS DIED FEW DAYS AGO, THERE ARE STILL SEVERAL ANDAMANESE LIVING IN STRAIT ISLAND, NEAR PORT BLAIR.

Boa Sr, who died last week aged around 85, was the last speaker of ‘Bo’, one of the ten Great Andamanese languages. The Bo are thought to have lived in the Andaman Islands for as much as 65,000 years, making them the descendants of one of the oldest human cultures on Earth.

Boa Sr was the oldest of the Great Andamanese, who now number just 52. Originally ten distinct tribes, the Great Andamanese were 5,000 strong when the British colonized the Andaman Islands in 1858. Most were killed or died of diseases brought by the colonizers.

Having failed to ‘pacify’ the tribes through violence, the British tried to ‘civilize’ them by capturing many and keeping them in an ‘Andaman Home’. Of the 150 children born in the home, none lived beyond the age of two.

The surviving Great Andamanese depend largely on the Indian government for food and shelter, and abuse of alcohol is rife.
YA, ITS TRUE, BUT YOU CAN'T SIMPLY SAY THEY ARE EXTINCT.

Boa Sr survived the Asian tsunami of December 2004, and told linguists, ‘We were all there when the earthquake came. The eldest told us ‘the Earth would part, don’t run away or move’. The elders told us, that’s how we know.’

Linguist Prof. Anvita Abbi, who knew Boa Sr for many years, said, ‘Since she was the only speaker of [Bo] she was very lonely as she had no one to converse with… Boa Sr. had a very good sense of humour and her smile and full throated laughter were infectious.’
MY DOUBT: FOR THE PAST 60 YEARS, there was no one to talk 'Bo' with the tribal lady, how did she manage to remember the language?

‘You cannot imagine the pain and anguish that I spend each day in being a mute witness to the loss of a remarkable culture and unique language.’


Boa Sr told Abbi she felt the neighbouring Jarawa tribe, who have not been decimated, were lucky to live in their forest away from the settlers who now occupy much of the Islands.

Survival’s director Stephen Corry said today, ‘The Great Andamanese were first massacred, then all but wiped out by paternalistic policies which left them ravaged by epidemics of disease, and robbed of their land and independence.

‘With the death of Boa Sr and the extinction of the Bo language, a unique part of human society is now just a memory. Boa’s loss is a bleak reminder that we must not allow this to happen to the other tribes of the Andaman Islands.’
Source: http://www.survivalinternational.org/news/5509

Chennai Corporation to launch census by June


By G Saravanan
Published on Feb 7,2010:
CHENNAI: With a view to have the population figures within city limits updated, Chennai Corporation is all set to begin a mega census by June.

According to sources, the exercise would involve about 8,000 field staff, who will enumerate various details from scores of houses located within the city limits. The door-to-door survey would continue for about two months and will be monitored by 1500 supervisors, sources said.
The groundwork and discussions in this regard has been completed and three exclusive training programmes would be provided to the field staff.
Apart from drafting central and state government staff for the process, there are also plans to rope in private school teachers for the effort. Each field staff would enumerate 150 households and collect basic details required for the census. The information collected from the houses would be synchronized with either the proposed national identity card or with some photographic or biometric evidences, sources said.
To get the accurate information from each points, the enumerator would depend on ward-wise digital maps.
Currently, such digital maps are readily available for 114 wards and maps for other remaining 44 divisions are being prepared.
According to sources, the digital maps are expected to play a major role in the census scheduled for 2011.
Today, the director of census operations Gopalakrishnan held a high level meeting with Corporation zonal officers at Ripon Buildings to discuss the modalities and training that has to be delivered to the field staff during the Government of India Census - 2011.

Friday, February 5, 2010

CHENNAI: Container trailer operators’ stir off

By G Saravanan

CHENNAI: With a three-hour long emergency meeting between the agitating truckers and Chennai Port management ending on a positive note on Thursday, container trailer operators called off their flash strike and resumed work by evening.

The port management also agreed to several suggestions put forward by the trailer association to minimise congestion on north Chennai roads.
Capt Subhash Kumar, chairman of Chennai Port Trust, told Express, “Based on the truckers’ main demand, we are opening two more entry points for loaded trailers at Gate No. 1 and all the Customs checks have been now moved out of the gate to container terminals.”

The truckers had claimed that Customs officials were taking more time than is the norm to clear incoming loaded container trailers at Gate No 1. The delay resulted in piling up of trailers on Kasimedu up to Ennore.

“In the meeting where all stakeholders, including the trailers union representatives and Customs participated, we discussed the issue in detail. The opening of two more entry points at Gate No. 1 would facilitate quicker entry of the trailers,” Capt Subhash said.

In other words, container trailers can now reach the terminals through three entry points. Port Trust officials are in talks with traffic authorities to open Gate No. 10 located near War Memorial for trailer traffic.

The Port Trust chairman further said that a vacant area of about five acres close to Gate No. 1 would be turned into a container trailer parking yard. This would help reduce trailer pile up on the main roads.

Under the new system agreed during the meeting, at Gate No. 1, CISF guards would check the pass and license of the driver.

S R Raja, president of Chennai Trailers Owners Association told Express that trucker operators were satisfied with the developments. According to Raja, after the decision to move Customs check on containers well inside the port premises, the road from Gate No. 1 up to the container terminal would accommodate more than 200 trailers.

Tuesday, February 2, 2010

ஈழம்: இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை!





ஈழம் தொடர்பான செய்திகளில், முள்ளிவாய்க்கால் சம்பவங்களைப் பற்றிக்கூறும் அனைவரும் அதை இறுதிப்போர் என்றே வர்ணிக்கின்றனர். ஆனால் அதுதான் இறுதிப்போர் என்று யார் அறுதியிட்டு கூற முடியும்? இன விடுதலைப்போரில் சறுக்குதல்கள் மிகவும் இயல்பானவையே. ஏதோ ஒரு விதத்தில் கட்டமைக்கப்பட்ட அரசு என்ற இயந்திரத்தை, அந்த அரசின் இயல்புகள் எத்தனை முரண்பாடுகளோடு இருந்தாலும், அதனை ஏற்று – அங்கீகரிக்கும் சர்வதேசச் சூழலில், தனிப்பட்ட ஈகோ பிரசினைகளும், துரோகங்களும் அதிகரித்து வரும் சூழலில் நடைபெறும் ஒரு இன விடுதலைப்போரில் சறுக்குதல்கள் மிகவும் இயல்பானவையே. ஆனால் இந்த சறுக்குதல்களிலிருந்து அந்த இனம் கற்றுக்கொள்ளும் பாடங்களே, அந்த இனத்தின் வாழ்க்கைக்கும், விடுதலை உள்ளிட்ட வளர்ச்சிகளுக்கும் பொறுப்பாக அமையும்.

ஈழத்தில் அண்மையில் ஏற்பட்ட சறுக்குதல் மிகவும் ஆழமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும் இந்த சறுக்குதலில் இருந்து தமிழினம் என்ன பாடத்தை கற்றுக்கொண்டது என்பது ஆழமான பரிசீலனைக்குரியது.மனித இனத்தின் மிகப்புராதனமான இனமான தமிழினம் அனைத்துத்துறைகளிலும் திறம் பெற்றிருந்ததை வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றைய தமிழினம் அதே திறத்துடன் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் வேதனைதான் மிஞ்சும். சுமார் 30 ஆண்டுகள் நடந்த ஈழ விடுதலைப்போரில் ஈழத்தமிழர்கள் எதைக்கற்றனர் என்பதைவிட தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதைக் கற்றார்கள் அல்லது எதை மறந்தார்கள் என்பதை பார்க்கலாம்.தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் ஈழம் குறித்து பேசாத மக்கள் பிரிவினரே இருக்க முடியாது: அரசியல் தலைவர்களும் இருக்க முடியாது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் இருந்த எழுச்சி இன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கான விடை மிகுந்த பரிசீலனைக்கு உரியது.ஈழப்பிரசினையின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் எழுச்சி, சிங்கள அரசால் இறுதிப்போர் என்று வர்ணிக்கப்பட்ட போரின்போது ஏற்படவில்லை. அதற்கான காரணங்களை பலரும், பலவிதமாக கூறக்கூடும். ஈழப்போர் நீண்டகாலம் நீடித்ததால் தமிழகத் தமிழர்களின் ஈடுபாடு குறைந்ததாக சிலர் கூறக்கூடும். ராஜீவ் காந்தியின் முடிவு காரணமாக தமிழகத்தமிழர்களின் ஆதரவை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டதாக கூறக்கூடும். விடுதலைப்புலிகள் மீதான மக்களின் விமர்சனம்கூட ஈழம் குறித்து தமிழகத்தமிழர்களின் நிலையை மாற்றியிருக்கலாம் என்றும் சிலர் விமர்சிக்கக்கூடும்.

ஆனால் இந்த காரணங்கள் இல்லாவிட்டால்கூட தமிழகத் தமிழர்கள் ஈழப்பிரசினையில் இந்த எதிர்விளைவை காட்டியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு தமிழர்களின் ஆளுமையில் அல்லது உளவியலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பரிசீலிக்க வேண்டும்.கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழ்நாடு பலவிதங்களில் முன்னேறி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மாறிவரும் உலகமய பொருளியல் சூழலுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் ஒரு பிரிவினர், கணிப்பொறி உள்ளிட்ட நவீன அறிவியல்துறைகளில் நிபுணத்துவம் பெற்று உலகம் முழுவதும் உள்ள கணிப்பொறி நிறுவனங்களில் முக்கிய பணியாற்றுவது வரவேற்க வேண்டியதுதான்.ஆனால் சமூகத்தில் முன்னேற்றம் என்பது பொருள் சார்ந்த ஒரு கருத்தாக மட்டுமே இருப்பது மிகப்பெரும் பின்னடைவே! அறம் சார்ந்த சிந்தனைகள் பின்தள்ளப்பட்டு, பொருளே பிரதானம் என்ற கருத்து சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் முதன்மை பெற்று வருகிறது. பொதுமக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் முன்மாதிரி பிம்பங்களாக திகழும் அரசியல் தலைவர்கள், தொழிற்துறையினர், திரையுலக பிரபலங்கள் ஆகிய அனைவரும் அறம் குறித்த சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, பொருள் குறித்த சிந்தனைகளையே முன்வைக்கின்றனர்.

எனவே இளையதலைமுறையும், அறத்தைக் கொன்றேனும் பொருள் தேடவேண்டும் என்று புரிந்து கொள்கிறது. ஆனால் கொல்லப்படுவது அறம் மட்டுமல்ல, தங்கள் சுய ஆளுமையும்தான்! என்பது புரிவதில்லை.ஆளுமைகள் கொல்லப்படும்போதுதான் அறம் சார்ந்த பார்வைகள் பொருள் இழக்கின்றன. பதிலாக பொருளே பிரதானமாக, பொருளுக்காக எதையும் சமரசம் செய்துகொள்ளும் மனோபாவம் உருவாகிறது. இந்த நிலையில்தான் சமூகப்பார்வை என்பது முற்றிலுமாக விலகி சுயநலம் மட்டுமே முன்னால் நிற்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இன்னல் என்றால்கூட, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலை உருவாகிறது.இந்த மனநிலை மேலும், மேலும் ஊடுருவி தன்னை பாதிக்காத எந்த பிரச்சினையும், ஒரு பிரச்சினையே அல்ல என்று முடிவெடுக்க வைக்கிறது.தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வதாக மைய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்தாலும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி கொள்கைகளை வகுப்பதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வெளியானாலும் அது எவருடைய மனதையும் துணுக்குற வைப்பதில்லை.தமிழர்களிடம் இந்த மனநிலையை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் ஊடகங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளைவிட நடிகர், நடிகைகள் குறித்த செய்திகளும், அரசும் காவல்துறையும் திட்டமிட்டு வெளியிடும் பிற பரபரப்பு செய்திகளும் பொதுமக்கள் உண்மையான பிரசினைகள் குறித்து சிந்திக்காதவண்ணம் திசை திருப்புவதில் வெற்றி காண்கின்றன. ஆக மொத்தத்தில் எந்த ஒரு சமூக அநீதியைக் கண்டாலும், அதைக் காணாததுபோல் நடித்து சிந்தனையை வேறுபக்கம் திருப்பும் அயோக்கியத்தனமான முயற்சியில் தமிழ்ச்சமூகம் வெற்றியடைகிறது. அந்த வெற்றியில் இன்பமும் காண்கிறது.

இந்த உளவியலின் நீட்சியே ஈழ விவகாரத்திலும் நடந்தது.

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததில் தமிழகத்தின் அனைத்து துறையினரும் அவரவர் தகுதிக்கேற்ப போட்டிபோட்டு வேலை செய்ததாக துணிந்து கூறலாம்.உயிர்தப்பி ஓடி வரும் ஈழ அகதிகள் அனைவரையும் பயங்கரவாதிகளாக நடத்திய, நடத்தும் மத்திய-மாநில அரசு அமைப்புகள், அபயம் தேடி ஓடிவந்த அகதிகளை கால்நடைகளைவிட கீழாக நடத்தின. இவர்களுக்காக பேசுவதற்கு தமிழகத்தின் எந்த பிரதான அரசியல் கட்சியும் முன்வரவில்லை.

ஈழத்தில் போர்முனையில் இருந்த போராளிகளையும், ஆயுதம் தரிக்காத சாதாரண குடிமக்களையும் சர்வதேச சட்டவிதிகளின்படி நடத்தவேண்டும் என்ற சட்டரீதியான குரலை முழுமையாகவும், உரத்தும் யாரும் எழுப்பவில்லை. இது குறித்து சர்வதேச நாடுகளிடம் முறையான கருத்துப்பரப்பலை மேற்கொள்ள வேண்டிய தார்மீக கடமையேக் கொண்ட இந்தியாவோ, இறுதி யுத்தத்திற்கு பிறகும்கூட சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் நடந்து கொள்கிறது. மத்திய அரசில் அங்கம் வகித்த, வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளும் இதனை வலியுறுத்தவில்லை.

தமிழ்நாட்டிலோ ஈழவிவகாரத்தை கையிலெடுத்த அனைத்து அரசியல்வாதிகளுமே, தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களுக்கும், நலன்களுக்கும் ஏற்பவே இந்த விவகாரத்தை கையாண்டனர். இந்த கொடுமையின் உச்சத்தில் செயலாற்றியது ஆளும் திமுகவும், முதன்மை எதிர்கட்சியான அதிமுகவும். திராவிடர் கழகம் போன்ற அரசியல் சாராத சமூக இயக்கங்களும்கூட ஈழப்பிரசினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சிந்திப்பதைவிட, தமிழகத்தின் ஆளும் கட்சியை சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவது குறித்தே அதிகம் யோசித்தது.
ஈழப்பிரசினையை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய சமூகக்கடமை கொண்ட ஊடகங்களோ துரோகத்தின் மறுவடிமாக நடந்து கொண்டன, நடந்து கொள்கின்றன! சென்னை நாய்க் கண்காட்சியில் வெப்பம் தாங்காமல் நான்கு உயர் இன நாய்கள் செத்துப்போனதைக்கூட பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பிய தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, ஈழத்து சோகங்களை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்து கட்சி சார்ந்த ஊடகங்களும் ஈழப்பிரசினையை முழுமையாக இருட்டடிப்பு செய்தோ அல்லது தங்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப திரித்தோ செய்தி வெளியிட்டன.இந்த விவகாரத்தில் ஊடகங்களை விமர்சித்தவர்கள்கூட பார்ப்பன ஊடகங்களின் எதிர்ப்பைத்தான் கண்டித்தனரே தவிர, தமிழர் ஊடகங்களின் துரோகத்தை இதுவரை அடையாளம் காட்டவில்லை, கண்டிக்கவில்லை. எதிரியைவிட துரோகி மோசமானவன் என்பது இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியவில்லை போலும்! சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர் சோகத்தை திட்டமிட்டு மறைத்த பாதகர்கள் ஒரு புறமென்றால், ஆட்சி பீடத்தை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற பாதுகாப்பு உணர்வு காரணமாக இந்த விவகாரத்தை தவிர்த்த ஊடகங்களும் உண்டு. வடஇந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட தேசிய ஊடகங்களும், மிழத்திற்குள் இருந்து கொண்டே தமிழர்களுக்கு எதிராக இயங்குவதை வழக்கமாக கொண்ட ஆங்கில ஊடகங்களும் ஈழத்தமிழர் விவகாரத்தை மிகவும் வன்மத்துடனே கையாண்டன.

பெரும் முதலீடுகளில் இயங்கும் இந்த ஊடக நிறுவனங்களின் துரோகத்தையாவது முதலாளித்துவப் பார்வையில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் துரோகத்தை காலத்தால் மன்னிக்க முடியாது. பணியாற்றும் நிறுவனங்களுக்கு தங்கள் ஒட்டுமொத்த சிந்தனையையும், செயல்திறனையும் விற்றுவிட்டு “இன்டெலக்சுவல் இம்பொடென்ட்” ஆகிப்போன இந்த செய்தியாளர்கள், அவர்கள் பணியாற்றியிருக்க வேண்டிய பொதுத்தளத்தை முழுவதுமாக புறக்கணித்தனர். இந்தப் பிரசினையில் முழுமையாக செயல்பட்டிருக்க வேண்டிய பத்திரிகையாளர் அமைப்புகள் ஈழப்பிரச்சினை குறித்து கள்ள மவுனம் சாதித்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சில பத்திரிகையாளர்கள் மட்டுமே இணைய தளங்கள், வலைபதிவுகள் போன்ற மாற்று ஊடகங்களை திறம்பட பயன்படுத்தி ஓரளவிற்காவது ஈழமக்களின் சோகங்களை உலகிற்கு எடுத்து வைத்தனர். ஆனால் அவற்றிலும் மிகஅதிகமானவை தமிழில் மட்டுமே வெளியானதால் இந்தியாவில் தமிழ் அல்லாத மாநில மொழி ஊடகங்கள் இந்த செய்திகளை பிரசுரிக்க விரும்பினாலும், செய்திக்கான மூலங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.தமிழகத்தில் ஈழப்பிரச்சினைக்காக ஓரளவிற்காவது போராடியவர்கள் வழக்குரைஞர்கள் மட்டுமே. ஆனால் சட்டரீதியாகவும், அறிவுசார்ந்தும் நடந்திருக்க வேண்டிய அந்தப்போராட்டமும், சரியான தலைமையோ, திட்டமிடலோ, கூட்டு நடவடிக்கைகளோ இல்லாததால் – அரசின் சாணக்கியத்தனமான சூழ்ச்சிக்கு இரையாகி போராட்டமே திசைமாறி நீர்த்துப்போனது.போராட்டம் என்பதையே சிந்தித்திராத கணிப்பொறித் தமிழர்களில் சிலர், இன உணர்வு பெற்று போராட முன்வந்தனர். படித்த நடுத்தர வர்க்கத்தில் பெரும் மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியிருக்க வேண்டிய இந்தப்பிரிவினரின் போராட்ட உணர்வுகளும்கூட சிலரின் தவறான ஆலோசனைகளால் திசைமாறிப்போனது.

சட்டக்கல்லூரி மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் யாரும் இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் இந்த பிரசினையில் எந்த ஆர்வமும் காட்டியதாக தெரியவில்லை. இதைக் கல்விமுறையின் வெற்றி என்றுகூட சிலர் கூறக்கூடும். ஆனால் இத்தகைய கல்வியை கற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களாக – ஆதிக்கச் சக்தியினரின் கைப்பாவைகளாக மட்டுமே – வாழ்வதற்கு தயாரிக்கப்படுகின்றனர் என்பதை யாரும் உணரவில்லை.இதற்கு நடுவிலும் சில நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளன. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளை குறிவைத்து தமிழக இளைஞர்கள் களம் இறங்கியதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றோருக்கு தக்க பாடமும், ப.சிதம்பரம் போன்றோருக்கு எச்சரிக்கையும் பரிசாக கிடைத்திருக்கிறது.இதைவிட முக்கியமாக பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் நம்பும் அரசியல் தலைவர் மற்றும் நடிகர்களின் உண்மை முகம் தெரிந்திருக்கிறது. நல் உணர்வு கொண்ட மிகச்சில ஊடகவியலாளர்களுக்கு மாற்று ஊடகத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது குறித்து அனுபவமும் கிடைத்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், எதிர்காலம் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், எந்த உணர்வுமற்று இருக்கும் தமிழன் தனக்குத் தேவையான அனைத்து உணர்வுகளையும் பெறவேண்டிய நிலையை காலம் உருவாக்கும். உலகமயச்சூழலில் அனைத்து இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகமாகும் இன்றையச் சூழலில், ஈழத்தமிழன் சந்தித்த அனைத்துக் கொடுமைகளையும் வேறொரு விதத்தில் தமிழகத் தமிழனும் சந்திப்பான். அவனது மரத்துப்போன உணர்வுகளை அன்றைய சூழல் மீட்டெடுக்கும்.எந்த உலகமயச்சூழல் ஈழத்தமிழருக்கு நேற்று பெரும் இன்னலை ஏற்படுத்தியதோ, அதே உலகமயச்சூழல் நாளை தமிழ்நாட்டுத் தமிழனின் உணர்வுகளை தட்டியெழுப்பும். ஆட்சியாளர்களின் அடுக்குமொழி வசனங்களும், அவர்கள் ஊட்டி வளர்க்கும் ஆபாச கலைகளும் தங்களை ஏமாற்றுவதற்கே என்பதை தமிழ்நாட்டுத் தமிழன் உணரும் காலம் வரும்.அப்போது ஆதிக்கச்சக்திகள் எழுதும் வரலாற்றுப் பக்கங்கள் மாற்றி எழுதப்படும். ஒரு இனத்தின் வாழ்க்கையையோ, இறுதிப்போரையோ மற்றோர் இனம் தீர்மானிக்கமுடியாது என்பது உணரப்படும். முள்ளிவாய்க்காலில் நடந்தது இறுதிப்போர் என்ற சொல்லாடலை தமிழர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். முள்ளிவாய்க்கால்தான் இறுதிப்போரா? இல்லை, அது வேறொரு அத்தியாயத்தின் தொடக்கமா? என்பதை நாளைய ஈழத்தமிழர்கள் தீர்மானிப்பார்கள்.

தனி ஈழத்திற்கான தேவைகள் இருக்கும்வரை ஈழப்போர் தொடரவே செய்யும் என்பதை சிங்கள அரசும், உலக நாடுகளும் புரிந்து கொள்ளும். போரின் களம் மாறலாம், காலம் மாறலாம், போர் ஆயுதங்கள் – போர் முறைகள் மாறலாம் – ஆனால் போர் தொடர்ந்து நடைபெறும் என்பதை உலகம் உணரும். இந்தப் போரை தொடர்ந்து நடத்த ஈழத்தமிழர்கள் வந்து கொண்டே இருப்பார்கள், தமிழர்களின் உரிமைகள் குறித்து கரிசனையுடன் செயல்படுவதற்கு சன்டே லீடர் இதழ் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க போன்ற மனசாட்சியுள்ள சிங்களர்களும் கருத்துப்போராளிகளாக பிறந்து கொண்டே இருப்பார்கள்.

காலமாற்றத்தில் தமிழகத் தமிழனும் சினிமா, அரசியல் பித்தம் தெளிந்து, சுயநினைவு அடைந்து ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமல்ல: ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்குமான விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு நல்குவான்.

ஆதவன் பெப்ரவரி இதழுக்காக எழுதியவர் ஆர் சுந்தரராஜன்
Source: http://www.puthinamnews.com/?p=5669#more-5669

Corporation may double spending on health


By G Saravanan

Published on February 02,2010:
CHENNAI: Keeping its priorities on target year after year, the oldest civic body in the country, Chennai Corporation, is all set to table another budget sans any new taxes, focussing mainly on health and education sectors.

According to sources, the annual budget for 2010-11, likely to be tabled during the third week of March, is expected to double allocations in the education and health segments to maintain momentum before the Assembly elections due in May 2011.

In last year’s budget, Rs 5 crore was allocated for education development and Rs 1 crore for maintaining health priorities.

Besides, allocation in the infrastructure sector is likely to stay around Rs 100 crore this year. The allocation for the sector stood at Rs 175 crore last year and the high allocation according to officials was due to construction of several cement roads in North Chennai.

Though the proposed budget is likely to be without any new attractive schemes due to the corporation’s burgeoning day-to-day expenditure, the civic body may announce its plan to build a modern communicable diseases hospital for south Chennai to cater to lakhs of people now dependent on the only CDH located in Tondiarpet.

The proposed facility would come up at suburban Madambakkam where the civic body has a vast stretch of land.
Since the Assembly elections are due in May 2011, the civic body’s new budget is unlikely to introduce any new tax or enhance the existing property tax structure in the next financial year.

According to sources, the civic body’s property tax collection target for 2009-10 is very much achievable. Till January, its Revenue Department had collected Rs 275 crore and by March-end, they hope to cross the target of Rs 350 crore.

While the Corporation’s revenue is increasing over the years, senior officials say that it has reached the saturation and the civic body’s increased expenditure would not allow them to divest funds for more developmental schemes.

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...