Saturday, January 29, 2011

துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரி கூடுதல் டி.ஜி.பி.யிடம் மீனவர்கள் மனு


Source: http://www.dinamani.com/
 
சென்னை, ஜன. 28: இலங்கை கடற்படையினரிடமிருந்து தற்காத்துக் கொள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணனிடம் மீனவர் அமைப்பினர் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.

தென்னிந்திய மீனவர் நலச் சங்கம், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு மீனவர் மக்கள் பேரவை ஆகிய மூன்று மீனவர்கள் சங்கத்தின் சார்பாக இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவின் விவரம்: பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள்.

இதனால் கடந்த ஆண்டுகளில் பல மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சூடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

மேலும் மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விசைப்படகுகள், வலைகள், நவீன மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவை இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் படுகாயமடைந்தும், உடல் ஊனமுற்ற நிலையிலும் பல மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், தமிழக காவல்துறையும் உரிய பாதுகாப்பைத் தர இயலவில்லை.

எனவே, தமிழகத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள காரணத்தால், ஒவ்வொரு மீனவருக்கும் தற்காப்புக்காக குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலையங்கம்: குறை ஒன்று தீர்ந்தது


தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், "கப்பலோட்டிய தமிழன்' "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர்.  

 இந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல்! இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.

 இத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது.

 சிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது.

 இந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம்.

 ""வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ! வருந்தலை, என் கேண்மைக் கோவே!...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி! அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது.

 சிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

 கோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும்.

 எல்லாவற்றுக்கும் மேலாக, "தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தூத்துக்குடி "கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது.

 "சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. "சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி.

 மத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் "தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல!

Firearms licence: TN fishermen approach DGP office

Source:http://expressbuzz.com/states/tamilnadu/firearms-licence-fishermen-approach-dgp-office/243261.html

By G Saravanan

Published in The New Indian Express, Chennai, on January 29,2011:
CHENNAI: A group of fishermen representing different traditional fishing associations in the State on Friday met senior police officials at the office of the Director General of Police (DGP) to submit a memorandum seeking firearms licence for selfdefence in high seas.

While the DGP Letika Saran was not available due to her prior engagement, they met the Additional Director General of Police (Law and Order) K Radhakrishnan and handed over the memorandum detailing why the State's fishermen were seeking gun licence.
Speaking to Express, K Bharathi, president of South Indian Fishermen Welfare Association (SIFWA), said, "Along with a group of fishermen, we met the top police official and apprised him of the mental agony faced by traditional fishermen in the wake of the recent murders of TN fishermen by Lankan Navy despite the end of ethnic conflict two years ago."
''The official acknowledged our point on why fishermen came to the conclusion of carrying an arm while fishing midsea for selfprotection and he assured of positive action on the memorandum from the State government soon," Bharathi added.
J Kosumani, president of Tamil Nadu Meenavar Makkal Peravai, and Mathiyalagan, president of Coastal Fishermen Protection Movement, accompanied him to the DGP office.
CAMPAIGN FOR GUN LICENCE: To root out the misconception among traditional fishermen on carrying a licensed gun for selfprotection, which they feel was against law, SIFWA has planned for a massive campaign among the fishermen from February 5 at all 13 coastal districts.
Bharathi, president of SIFWA, said,"Since the traditional fishermen feel carrying a gun is against law, we have planned a hamletlevel campaign to educate them."

Wednesday, January 26, 2011

Islander chosen for coveted Padma Award



Courtesy pic: http://www.tnaionline.org/july-10/4.htm
Source: THE DAILY TELEGRAMS, Jan. 26, 2011


Ms. Shanti Teresa Lakra, an Auxiliary Nurse Midwife attached to Tribal Health Section of  Directorate of Health Services of A&N Administration has been conferred this year’s ‘Padma Shri’ given for distinguished service in any field.
Ms. Lakra was posted at Sub-center in Dugong Creek, which is a remote island in Little Andaman. Being the only medical staff, she performed all medical and health care services to Onge tribes in settlement colony as well as in the deep jungle which 
is the habitat of Onge tribes.

Talking exclusively to ‘The Daily Telegrams’ here this evening, Ms. Shanti was ecstatic on being conferred the award. She said, she joined the department as ANM in the year 2001 and since then she has served the primitive tribes of the islands particularly Jarawas and Onges. 
Narrating her experience with the tribal community, she said she has attended many complicated cases during the past several years. She has also learned the dialect of Onge and Jarawa tribes and this, she felt, helped in communicating with the people in a much better way.

When tsunami washed almost all parts of this islands, Shanti bravely performed her duties at Dugong Creek staying with Onges adjacent to jungle in an open tent for more than 2 years. She rendered all possible efforts to sustain life of the people, gave timely medical coverage and monitoring the situation meticulously.

She did her best efforts by walking through dense forest and crossing two rivers to reach to the temporary settlement after tsunami to obtain the supplies and medicines.
It is worth mentioning that Ms. Shanti recently received the Florence Nightangle Award for the year 2010.


Tuesday, January 25, 2011

இலங்கை கடற்படை தாக்குதல் எதிரொலி: தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற மீனவர்கள் அமைப்புகள் முடிவு

Source:http://www.dinamani.com

சென்னை, ஜன. 24: இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிக்க பல்வேறு மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
 இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் அடுத்தடுத்து 2 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீனவர் அமைப்புகளின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
 புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினத்தை சேர்ந்த ஒரு மீனவர் கடந்த 12-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நிகழ்ந்து 10 நாள் இடைவெளியில் தற்போது, நாகை மாவட்டம், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
 அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களால் கடலோர மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்ற கருத்து மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 இதனால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.
 இந்த நிலையில் இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் போது, தங்களது உயிருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக உரிமம் கோரி விண்ணப்பிப்பது என மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
 தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் கோரி மாவட்டங்களில் உள்ள காவல் துறை அதிகாரிகளிடம் அடுத்த சில நாள்களில் மீனவர்கள் விண்ணப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கு. பாரதி தெரிவித்தார்.
 மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்த நடவடிக்கை மூலமே மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்த முடியும் என்றார் அவர்.
இவ்வாறு பெறப்படும் உரிமத்தை பயன்படுத்தி, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை சமாளிக்க தேவையான ஆயுதங்களையும், அவற்றை கையாள்வதற்கான பயிற்சியையும் அரசு அளிக்க வேண்டும் என இந்திய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி. தயாளன் கூறினார்.
 மீனவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவதற்காகவே துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர் என அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மகேஷ் தெரிவித்தார்.

TAMIL NADU: NO FAITH IN GOVTS, FISHERS WANT GUNS


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on January 25, 2011:


SENDING out a strong `message' to the state, central and Sri Lankan governments, several Tamil Nadu fishermen's associations have decided to seek firearms licences to protect themselves at sea.
For, recent mid-sea killings allegedly by the Lankan Navy have forced lakhs of fishermen in the 13 coastal districts to think about their safety, as the state and central governments have `failed' to avoid such conflicts on the Indo-Lankan maritime boundary.


K Bharathi, president of South Indian Fishermen Welfare Association, said they had lost faith in the Indian government. "Obtaining gun licences would definitely send the right message to the government," he told Express.
The Indian Fishermen Association said the government, besides granting gun licences, must distribute arms to all fishermen and train them in tackling the Lankan Navy.
Said its head M D Dayalan: "We believe that these cowa rdly acts will end only if they become a national issue. And that will happen only after firing incidents between TN fishermen and Lankan Navy are reported."

Fishermen threaten to seek asylum in Lanka


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on January 25, 2011:
CHENNAI: In a desperate step to save their lives, about 500 fishermen from the village of Pushpavanam near Vedaranyam in Nagapattinam district have planned to seek asylum with the Sri Lankan government for their safety.
M Kathirvel, president of the village panchayat, told Express: “Since the state and Central governments miserably failed to protect us while fishing despite having the world class Navy and Coast Guard, we have decided to seek asylum with the neighbouring nation to save our lives.
According to Kathirvel, in a week’s time, all these fishermen in 100-odd fibre boats (belonging to the villagers) would reach the Lankan maritime boundary to seek asylum with them.
Though the ‘hard decision’ seems to be taken after the tragic death of local fisherman N Jayakumar at the hands of Lankan Navy, it was primarily meant to put more pressure on the State and Centre to understand the ground reality faced by fishermen in the region, Kathirvel said.
“Since we don’t want to lead a life under constant fear of being killed or brutally attacked by Lankan Navy anytime while fishing in mid-sea, seeking asylum and continuing the fishing activities from the Lankan shores would only assure our food and more importantly the lives,” he added.
Seeking asylum with the country which constantly attacks Indian fishermen could only be attributed to the utter failure of the home country to provide security to them in sea, said S A Mahesh, president of All Indian Traditional Fishermen Association.
Mahesh further said that the Indian Government should wake up from deep slumber and act decisively to end the Lankan Navy’s unwarranted attacks on unarmed and innocent Tamil fishermen.

Monday, January 24, 2011

Displaced Lankan Tamils live in poor conditions



By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on January 23, 2011:

CHENNAI: Scoffing at the Indian and Sri Lankan governments’ claims of ethnic Tamils leading a decent life after the end of the Eelam War (2009) in the island nation, a Chennai-based lawyer who visited Lanka recently has said that the condition of Tamils there remains the same as it was immediately after the war.
Speaking to reporters here on Saturday, E Angayarkanni said, “We visited several places in the north and the lives of people who were living in camps or were relocated to other places remains the same despite the government’s claim that they have been well looked after.” 
The lawyer, who had travelled with a friend, had been detained by the Lankan army near the Omanthai checkpoint despite having the ministry of defence’s valid permits, and had only been released after the India government’s intervention.
She had also visited Parvathi Ammal, the late LTTE leader V Prabhakaran’s mother, and said though this had been an unforgettable moment, she had been overcome by anguish for not being able to do much when the entire Tamil race in Sri Lanka was slowly disappearing.

Saturday, January 22, 2011

7 ஆண்டுக்கு பின் சத்துணவு:"தினமலர்' செய்தி எதிரொலி



Source:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=171029

ராமநாதபுரம்:"தினமலர்' செய்தி எதிரொலியாக, ஏழு ஆண்டுகளுக்கு பின், குளத்தூர் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம், குளத்தூர் காலனியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 2002 செப்., 17ல் தொடங்கிய இப்பள்ளியில், சத்துணவு வசதி செய்து தரவில்லை. இதனால், குழந்தைகளின் சேர்க்கை விகிதம் கணிசமாக குறைந்தது. 
தற்போதைய நிலவரப்படி 12 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளின் இந்த பாராமுகம் குறித்து, கடந்த ஜன., 19ல் "தினமலர்' நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக பள்ளிக்கு சத்துணவு வழங்குமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னையிலிருந்து உத்தரவு பறந்தது. அருகில் உள்ள குளத்தூர் நடுநிலைப் பள்ளியிலிருந்து இப்பள்ளிக்கு சத்துணவு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து சத்துணவு கிடைத்த மகிழ்ச்சியில், குழந்தைகளும், பெற்றோரும் உற்சாகம் அடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் கூறியதாவது: ஏழு ஆண்டு போராட்டம், "தினமலர்' செய்தியால் நிறைவு பெற்றுவிட்டது. இதனால், பள்ளியின் சேர்க்கை வரும் ஆண்டில் அதிகரிக்கும், என்றார்

Thursday, January 20, 2011

More impetus for health and education sectors likely in Corpn budget


Chennai, January 19:
With the date (Feb 15) for presenting the civic body’s budget for the year 2011-12 announced, Chennai Corporation has kick started a series of meetings with the heads of the departments to finalise budgetary allocation for various public welfare schemes.

According to sources, Corporation Mayor Subramanian, keeping the forthcoming state Assembly elections in mind, would table another budget sans any new taxes focusing mainly on health and education sectors.
There is expectation that the budgetary allocations in education and health segments, two important sectors besides the infrastructure, could be increased considerably to maintain momentum in the schemes that were being announced and carried out in the last four years.
Mayor Subramanian is expected to unveil the financial plan on February 15 in the special Budget Meeting and on February 17, it will be adopted after open discussion in the House.
The extensive and detailed meeting with each department is likely to begin in couple of day, sources said.
In the meeting organised on Wednesday at Ripon Building, the civic body’s top officials and heads of the different departments led by the Mayor Subramanian reviewed the progress of different schemes announced in the 2010-11 budget.
Of the total 122 schemes announced, about 100 promises (schemes) were fulfilled by now and Subramanian ordered the officials to execute the remaining ones before February 15 deadline.
Since the historic Corporation has to be expanded by merging adjacent local bodies before the mandated October local body elections, it remains to seen how the civic body presents it budget in February.

Wednesday, January 19, 2011

ராமநாதபுரம் மாவட்டம் :சத்துணவை பார்க்காத அரசு பள்ளி : ஏமாற்றத்தில் குழந்தைகள்

Source:http://www.dinamalar.com/district_detail.asp?id=168984

ராமநாதபுரம் : பள்ளி தொடங்கிய நாள் முதல் சத்துணவு, முட்டை வினியோகிக்காத அரசு பள்ளி அவலத்தால், ஆதிதிராவிட குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ளது குளத்தூர் காலனி. இப்பகுதியில் 2002 செப்., 17ல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. 
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உதயமான இப்பள்ளி, அதன் பின் அதிகாரிகளின் பாராமுகத்தில் இயங்கத்தொடங்கியது. பள்ளி தொடங்கிய நாள் முதல் இன்று வரை சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 


கல்வித்துறை அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அமைச்சர் தங்கவேலனின் மகன் திவாகரன், நயினார்கோவில் ஒன்றியக்குழுத்தலைவராக உள்ள நிலையில், சத்துணவு திட்டம் சென்றடையாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்துணவு திட்டம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளியிலிருந்து சத்துணவு வழங்கும் நடைமுறை உள்ளது. இப்பள்ளியிலிருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் குளத்தூரில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கிருந்தாவது சத்துணவு கொண்டு வரச்செய்திருக்கலாம். அதற்கும் அதிகாரிகள் முன்வரவில்லை. இருக்கும் இரண்டு ஆசிரியர்களில் ஒருவரை வேறு பகுதிக்கு "டெப்டேஷன்' அனுப்புவதால், பாடம் எடுப்பதிலும் சிரமம் உள்ளது. இதனாலேயே பள்ளிக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து, 12 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த காமராஜ் கூறியதாவது: எனது குழந்தைகள் இங்கு தான் படிக்கின்றனர். இதுவரை சத்துணவு, முட்டை வழங்கியதில்லை. மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.பள்ளி தொடங்கியது முதல் இதே நிலை தான் உள்ளது, என்றார். தலைமை ஆசிரியர் அலங்கீர்தம் கூறியதாவது: சத்துணவு கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அதற்கான செலவு கணக்குகள் எதுவும் எழுதவில்லை, என்றார்.

Friday, January 14, 2011

யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!




Source:http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGQ2

கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா? தெரியாது! சதாசிவம் கிருஷ்ணகுமார்? தெரியாது! கிட்டுவைத் தெரியுமா? ஓ தெரியுமே! யார் அவர்? கிட்டு மாமா! யாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே நாளடைவில் சுருங்கி கிட்டு என ஆகியது. 
சுதந்திர தமிழீழத்தின் போராட்ட வரலாறு எழுதப்படும்போது தளபதி கிட்டுவுக்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்படும். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனம் கவர்ந்த, நெஞ்சம் நிறைந்த வீரனாக கிட்டு திகழ்கிறார்.
யாழ்ப்பாண இராச்சியம் நான்கு நூற்றாண்டு காலம் (கிபி 1215-1619) நிலைத்திருந்தது. இந்தக் காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பட்டப் பெயர் தாங்கிய பத்தொன்பது தமிழ் அரசர்கள் அதனை ஆண்டார்கள். ஒரு காலத்தில் கோட்டை, கண்டி சிங்கள இராச்சியங்களைவிட யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் இராச்சியம் மிக்க பலத்தோடு விளங்கியது. ஐபின்; பத்தூத்தா (Ibn Batuta) என்ற அராபிய பயணி இலங்கை வந்தபோது யாழ்ப்பாண மன்னனே அவனை சிவனொளி பாதமலையைத் தரிசிக்க சகல வசதிகள் செய்து கொடுத்து பல்லக்கில் அனுப்பி வைத்தான்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனை 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் தலைநகர் நல்லூரில் நடந்த போரில் தோற்கடித்து யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். அதன் பின் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் யாழ்;ப்பாணத்தைப் பிடித்து ஆண்டார்கள், ஆங்கிலேயர் 1948ஆம் ஆண்டு வெளியேறியபோது முழு இலங்கையையும் சிங்களவர் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். இவ்வாறு சங்கிலி வாள் முனையில் இழந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை துப்பாக்கி முனையில் மீட்டெடுத்து தமிழர் இறையாண்மையை நிலைநாட்டிய பெருமை தளபதி கிட்டுவையே சாரும்.
கிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். "ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்" என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.
கிட்டு காட்சிக்கு எளியவராக இருந்தார். வீதியோரத்தில் வெற்றிலை பாக்குப்போட்டுக் குதப்பிக் கொண்டிருக்கும் கிழவர்களோடு சேர்ந்து தானும் வெற்றிலை போட்டுக் கொள்வார். அவர்களோடு நாட்டு நடப்புக்களை அலசுவார்.
இந்தக் காலத்தில்தான் கிட்டு ஒரு சுத்த வீரன் என்ற படிமத்தோடு மக்கள் மனதில் உலா வரத் தொடங்கினார். காக்கிச் சட்டையைப் பார்த்தாலே பயந்து நடுங்கிய மக்களுக்கு கிட்டு ஒரு வித்தியாசமான, அதிசயமான பிறவியாகத் தெரிந்தார்.
சின்ன வட்டங்கள் கள்ளன்-போலிஸ் விளையாட்டுக்களைக் கைவிட்டு கிட்டுமாமா - ஆமி விளையாட்டு விளையாட ஆரம்பித்தார்கள். கிட்டுவைப் போல அவர்கள் இடுப்பிலும் ஒரு (போலி) மக்னம் 357 சுழற்துப்பாக்கி!
1987ஆம் ஆண்டு வடமராட்சியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில் கிட்டு விழுப்புண் பட்டார். புண்ணாற சில நாட்கள் எடுத்தன. அப்போதுதான் எதிரிகளால் அவர் மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற செய்தி வந்தபின்னர்தான் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள். இருந்தும் குண்டு வெடிப்பில் கிட்டு ஒரு காலை இழந்தது அவர்களுக்குக் கவலையை அளித்தது.
1971ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தலுக்கு பலியான பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களில் கிட்டுவும் ஒருவர். தரப்படுத்தல் இல்லாவிட்டால் வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் படித்துப் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று வெளியேறி மற்றவர்களைப் போல் ஏதாவது அரச பணியில் அமந்திருப்பார். அல்லது வெளிநாடு சென்றிருப்பார்.
1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிட்டு தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. இயக்கத்தில் இருந்தவர்களது தொகை ஒரு நூற்றுக்கு மேல் இல்லாத காலம். பெரும்பான்மையோர் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள்.
1983ஆம் ஆண்டு நிராயுதபாணிகளான தமிழர்கள் ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்களால் பலமாக்கத் தாக்கப்பட்டார்கள். உயிர் இழப்பு ஏராளம். உடமை இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் கருப்பு யூலை கிட்டுவின் ஆன்மாவில் பெரிய கீறலை ஏற்படுத்தியது. அவர் மனதுக்குள்ளே ஒரு பூகம்பம். பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வேகம் மேலோங்கியது!
அதே ஆண்டு கிட்டு இயக்கத்தின் தாக்குதல் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு இந்தியா சென்று இராணுவப் பயிற்சிபெற்றுத் திரும்பினார். 1984 பெப்ரவரி 29, யாழ்ப்பாணக் குருநகர் சிங்கள இராணுவ முகாம் அவர் தலைமையில் சென்ற போராளிகளால் தாக்கித் தகர்க்கப்பட்டது.
1985இல் கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் போலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் படிப்படியாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. புலிகளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் உருவாகியது. அதன் பொருளாதாரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளுர் உற்பத்தி ஊக்கிவிக்கப்பட்டது. சிறுவர்களது பொழுது போக்குக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டன. தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளின் மூலம் விடுதலை உணர்வு மக்களிடையே ஊட்டி வளர்க்கப்பட்டது. முதன்முறையாக நிதர்சனம்' தொலைக்காட்சி இயங்க ஆரம்பித்தது. களத்தில் என்ற செய்தி இதழ் வெளிவரத் தொடங்கியது.
கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக இருந்த காலத்திலேயே போர்க்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுவிக்க கொழும்பில் இருந்து வந்த சிங்கள இராணுவ தளபதிகள் அவரோடு பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். கிட்டுதான் சிங்கள இராணுவ தளபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட முதல் புலித் தளபதி.
கிட்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பெறும் பட்டத்தை விட திறந்தவெளி உலகப் பள்ளியில் படித்து சகலகலா வல்லவன் என்ற பட்டத்தை வாங்கியிருந்தார். தலைவர் பிரபாகரனால் நேரடியாக ஆயுதப் பயிற்சி பெற்ற சில வீரர்களில் கிட்டுவும் ஒருவர். தலைவரைப் போலவே குறிதவறாது சுடுவதில் மன்னன். நல்ல மேடைப் பேச்சாளி. இலக்கியவாதி. எழுத்தாளன். ஓவியர். படப்பிடிப்புக்காரன். எல்லாவற்றிற்கும் மேலாக மெத்தப் படித்தவர்களும் மதிக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது.
1989 ஆண்டு புலிகள் - ஸ்ரீலங்கா அரசுப் பேச்சு வார்த்தை தொடங்கியது. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள கொழும்பு சென்ற கிட்டு அங்கிருந்து வைத்தியத்துக்காக இலண்டன் போய் சேர்ந்தார். அனைத்துலக வி.புலிகளின் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கிட்டு பணியாற்றினார். அது இயக்கத்தைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலம். கிட்டுவின் பன்முகப்பட்ட ஆளுமைக்கு மேற்குலகம் களம் அமைத்துக் கொடுத்தது. அவரது வசீகரம் எல்லோரையும் கவர்ந்தது. அவரது நிர்வாகத் திறமை வைரம்போல் பளிச்சிட்டது. ஒவ்வொரு சின்ன விடயத்தையும் நேரடியாகக் கவனித்துக் கொள்வது அவரது பாணியாகும். வி.புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் என்ற ரீதியில் வெளிநாட்டு அரசியல் மற்றும் இராசதந்திரிகளைச் சந்தித்து தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தேடினார்.
பிரித்தானியாவில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை 1992 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் உருவாகியது. சுவிஸ் நாட்டுக்குப் பயணப்பட்ட கிட்டு அங்கிருந்து தமிழீழம் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது கடைசிப் பயணம் என்பது அவருக்கோ அவரது தோழர்களுக்கோ மற்ற யாருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை.
அனைத்துலகக் கடலில் கிட்டு 'அகாத்' (யுhயவ) என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை இந்திய அரசு அறிந்து கொண்டது. அவர் மேற்கு நாடுகள் தயாரித்த அமைதித் திட்டத்தின் தூதுவனாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இந்தியாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இருந்தும் கிட்டுவின் கப்பலை இடைமறிக்குமாறு இந்திய அரசு கடற்படைக்குக் கட்டளை இட்டது.
1993 ஆம் ஆண்டு 13ம் நாள் கிட்டுவின் கப்பல் இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த இரண்டு நாசகாரிக் கப்பல்களால் அனைத்துலகக் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது. கிட்டு அந்தச் செய்தியை தொலைத் தொடர்பு கருவியின் மூலம் வி.புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு அறிவித்தார். கப்பல் இடைமறிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. இந்தியா மவுனம் சாதித்தது. அகத் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்தியக் கடல் எல்லைவரை கொண்டு வரப்பட்டது. தளபது கிட்டுவும் அவரது போராளிகளும் சரண் அடையுமாறு கேட்கப்பட்டனர். சரண் அடைய மறுத்தால் அகத் தாக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரித்தது.
கிட்டுவைக் கைது செய்து ராஜிவ் காந்தியின் கொலைக்கு அவர் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் தந்திரமாக இருந்தது. அதே நேரம் கிட்டுவை உயிரோடு பிடிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பது புலிகளின் தாரக மந்திரம் என்பது உலகறிந்த செய்தி.
தளபதி கிட்டுவும் அவருடன் பயணம் செய்த ஒன்பது போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வங்கக் கடலில் சங்கமமானார்கள்!
அந்தச் செய்தி உலகம் வாழ் தமிழ் மக்கள் தலையில் இடியென இறங்கியது! வங்கமா கடல் தீயினில் கொதித்தது! "அசோகச் சக்கரம்" குருதியில் குளித்தது! அகிம்சையின் அரிச்சுவடியை அறிமுகம் செய்த பாரதம் கிட்டு மற்றும் அவரது தோழர்களது செந்நீர் குடித்து மகிழ்ந்தது!
இந்தியாவின் வஞ்சகத்துக்கு விடுதலைப் புலிகள் பலியானது இது மூன்றாவது தடவை. முதற் பலி தியாகி திலீபன். இரண்டாவது பலி இந்தியாவின் மத்தியத்தை நம்பி கடற்பயணம் செய்த தளபதிகள் குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட 17 வி.புலிகளை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்யது பலாலியில் இருந்த இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்களைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது எல்லோரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றாவது பலி வங்கக் கடலில் கிட்டுவும் அவரது ஒன்பது தோழர்களும்.
விடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பது உண்மைதான். அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வஞ்சகத்திற்கு, சூழ்ச்சிக்கு, காட்டிக்கொடுப்பிற்குப் பலிபோன கிட்டு, குட்டிஸ்ரீ, திலீபன், குமரப்பா, புலேந்திரன் போன்ற போராளிகள், தளபதிகள் இவர்களின் நினைவு தமிழீழ தேசத்தின் ஆழ்மனதில் ஆழமான வடுவாக, துடைக்க முடியாத கறையாகப் பதிந்த வரலாற்றுக் காயம் காலம் காலமாக அழியாது இருக்கும்!
கிட்டு போன்ற மாவீரர்களுக்கு மரணமில்லை. அவரது 18 ஆவது நினைவு நாள் அந்தச் செய்தியைத்தான் சொல்லி நிற்கின்றது. எமது மாவீரர்களின் ஈகை வீண்போகக் கூடாது. அவர்களது தாயகக் கனவை நாம் என்றோ ஒரு நாள் நினைவாக்குவோம்!
தளபதி கிட்டு காற்றோடு காற்றாகக் கடலோடு கடலாக மறைந்தபோது "கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு" இப்படிச் சொன்னவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
வல்வைக் கரையெழுந்த புயல் ஓய்ந்ததோ?
வண்ணத் தமிழீழ மலை சரிந்ததோ?
வங்கக் கடல் மடியில் புலி தவித்ததோ?
வஞ்சகரால் எங்கள் குயில் மடிந்ததோ
?

நக்கீரன்
athangav@sympatico.ca 

Thursday, January 13, 2011

துரைமுருகனின் ஆபாச பேச்சு

PIC-courtesy: www.asiantribune.com


தமிழக சட்டப் பேரவையில் இன்று (13-1-2011) அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசினார். 


துரைமுருகன் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று அவரது ஆபாசத்துக்கு அமைச்சர்கள் க. அன்பழகன், க. பொன்முடி ஆகியோர் வக்காலத்து வாங்கினார்கள். 
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு காரணமாக துரைமுருகன் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
துரைமுருகனின் ஆபாச பேச்சுக்கு அவையில் இருந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக பெண் உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர்கள் குரல் கொடுக்காதது பத்திரிகையாளர் மாடத்திலிருந்த என்னை வேதனை கொள்ளச் செய்தது.
SENT BY A TAMIL DAILY REPORTER

CHENNAI Corporation to better record on tax collection


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on January 13, 2011:
CHENNAI: After registering a record collection of property tax as well as professional tax last year, Corporation’s Revenue Department is again set to surpass its target for 2010-11. It has already collected about 73 per cent of its target and officials hope to better their record.
According to sources, the civic body collected about Rs 265 crore in property tax till January first week, against the targeted Rs 360 crore. In the professional tax segment, about Rs 99 crore was collected till December, against a target of Rs 135 crore for 2010-11.
With three months remaining, sources said the targets were likely to surpass by mid-March. With the average collection of Property Tax standing around Rs 1.5 crore per day, the target seems to be achievable.
More importantly, the civic body collects about Rs 50 crore in March alone, when the year-end blues hit people.
In the last financial year (2009-10), for the first time in the history of the Corporation, the total collection of Property Tax and Profession Tax reached Rs 490 crore mark. About 11,000 taxpayers have an arrears of above Rs 1 lakh.

Tuesday, January 11, 2011

Mongla base shelled by Burma Army artillery

Source:http://www.shanland.org/index.php?option=com_content&view=article&id=3402:mongla-base-shelled-by-burma-army-artillery&catid=86:war&Itemid=284

Burma Army’s artillery force, which is based in Shan State East’s Mongyawng township, has reportedly targeted and tested their weapons against one of the groups that is at loggerheads. This group is the National Democratic Alliance Army (NDAA), better known as Mongla group, according to sources from Mongla.

The incident took place on 7 January. The base that was attacked was located on Loi Parng Nao, which, at 5, 842 feet, is the second highest mountain in the Shan State. 15 155 mm artillery shells had fallen both inside and around the base. No injuries were reported on the Mongla side, an officer from the group said.


According to him, the Burma Army reportedly told the group [Mongla] a day earlier that they were going to test their weapons. The Mongla group says it did not expect the Burma Army to fire upon their base. They thought the Burma Army should not have targeted their base in the first place, if what they wanted was peace.

“It was like they intended to intimidate us,” the officer commented.

The recently used 155 mm artillery, which is said to be able to reach 24 kilometers, was reportedly brought from China, Mongla sources said.

Concerning the test, some border watchers on the Sino-Burma border commented the incident does not mean there would be a possible war; however, it could relate to some of the Mongla group’s speeches delivered on Burma Independence Day, January 4.

“The speech recalled that Burma Independence Day came from the Panglong Agreement, which was signed by different ethnic territories and Burma's representative General Aung San in order to demand Britain for independence and establish a genune federal union. But contrary to expectations, it was just artificial Independence aid an artificial union,” the source said.

Another factor that could have made the junta unhappy is that the Mongla is still said to be using the old national flag, not the new flag as stipulated in 2008 constitution.

Regarding the shooting, the Mongla made no response except to order all of its fighters to stay alert and keep an eye on the Burma Army movement.

The Loi Pangnao Mountain is an important strategic location that the two sides [Burma Army and Mongla] have been scrambling over each other for possession since September 2009. Each side is telling the other to stay off the mountain but neither is leaving.

"இஸ்ரேல் மொசாட் படை" வழங்கும் ஒத்த பாதுகாப்பு தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்டதா?

Source:http://www.athirvu.com/
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் மெய்ப்பாதுகாப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேறு எங்கும்பார்க்க முடியாத அளவு பாதுகாப்பு வாய்ந்தது என இலங்கைஇராணுவத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.


தேசியத் தலைவர் இரவு நேரத்தில் தங்கும் இடம் ஒன்றை தற்போது இராணுவம் தனதுஇரகசியக் கட்டளைபீடம் ஒன்றாக மாற்றியுள்ளதாக அறியப்படுகிறதுஇந்த இரகசியக்கட்டளை பீடத்துக்குச் சென்ற நபர் ஒருவருக்கு மேற்படி இராணுவம் இத் தகவல்களைத்தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய நபர் ஒருவருக்கு "மொசாட் படைஎவ்வாறு பாதுகாப்பு வழங்குமோஅதுபோலவே தேசியத் தலைவரின் பாதுகாப்பும் அமைந்திருந்ததாக அவர் மேலும்தெரிவித்தார்.

சுமார் 6 கிலோமீற்றர் சுற்றளவுள்ள மூன்று முட்கம்பி வேலிகளால் ஆன சுற்று வளையம்ஒன்றுக்குள் தேசியத் தலைவர் தங்குமிடம் இருந்ததாகவும்அதனைச் சுற்றி 10காவலரண்கள் இருந்ததாகவும்அவை ரோந்தில் ஈடுபடும் வண்ணம்அமைந்திருந்ததாகவும் அறியப்படுகிறது.

பின்னர் அந்தச் சுற்றுவளையத்தைச் சுற்றி அடுத்த முட்கம்பிகள் போடப்பட்டு, 7காவலரண்கள் சீரான முறையில் அமைந்திருந்ததாகவும்அதன் பின்னரே தேசியத்தலைவர் தங்கியிருந்த வீடு இருந்ததாகவும் சொல்லப்படுகிறதுஒரு சுற்றுவட்டப்பாதையில் இரவுநேரங்களில் 3 அடுக்குகளாக ரோந்து செல்லக்கூடிய வகையில் அதுஅமைந்திருந்தது என் குறப்படுகிறது.

அவரது வீட்டிற்கு நேரடியாக உள்ளே செல்லக்கூடிய ஒரு பாதையும்பின்புறமாகவும்வேகமாகவும் பதுங்கு குழிக்குள் செல்லக்கூடிய வகையில் ஒரு பாதை இருப்பதாகவும்கூறப்படுகிறதுஅதாவது இலங்கை போர் விமானங்கள் அவர் வாகனத் தொடரணியைபின் தொடர்ந்து வந்தால் கூடஅவர் வாகனம் நேரடியாக சுரங்கப் பாதைக்கு செல்லும்திறன்கொண்டதாக அது அமைந்துள்ளது என அவ்வதிகாரி விளக்கியுள்ளார்இதுபோன்றபாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவான "மொசாட்அமைப்பாலேயேஅதிகம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விவரித்துள்ளார்அதுபோல மொசாட்படையினர் கொடுக்கும் ஆலோசனைகளைப் போன்ற அமைப்புகளே அங்கேகாணப்பட்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மிகவும் நேர்த்தியாகவும்சமாந்தரமாகவும் எவரும் உட்புகுமுடியாத அளவு உச்சக்கட்டபாதுகாப்பு அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறதுதலைவரின் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தவர்கள்முக்கிய நபர்களைப் பாதுகாக்கும் பயிற்சிகளைப்பெற்றிருந்ததாகவும்அவர்கள் பல வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எவ்வாறு தனதுதலைவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற விடையத்தை நன்குகற்றுத்தெரிந்துவைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்சமீபத்தில் இப் பகுதிகளில் இருந்துகைப்பற்றப்பட்ட பல புத்தகங்களும்பாதுகாப்பு சம்பந்தமான வீடியோக்களுமே இதற்குஆதரம் என்கிறார் அந்த அதிகாரிதேசிய தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்,அவ்விடத்தை இராணுவம் தற்போது இரகசியக் கட்டளைப் பீடமாக மாற்றியுள்ளதாகவும்அறியப்படுகிறது.





Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...