Monday, September 20, 2010

மூடு​வி​ழாவை நோக்கி மாத​வ​ரம் சரக்கு வாகன முனை​யம்: தமி​ழக அரசு கவனிக்​குமா?

Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=305604&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=மூடு​வி​ழாவை%20நோக்கி%20மாத​வ​ரம்%20சரக்கு%20வாகன%20முனை​யம்:%20தமி​ழக%20அரசு%20கவனிக்​குமா?

முகவை.க.சிவ​கு​மார்
திரு​வொற்​றி​யூர் :​ திட்​டம் தொடங்​கப்​பட்டு 20 ஆண்​டு​க​ளைக் கடந்​து​விட்ட ​நிலை​யில் மாத​வ​ரம் சரக்கு வாக​னம் முனை​யம் கடும் நெருக்​க​டி​யில் சிக்​கித் தவிக்​கி​றது.​
இங்கு வச​தி​களை மேம்​ப​டுத்த வேண்​டிய சென்னை பெரு​ந​கர வளர்ச்​சிக் குழும அதி​கா​ரி​கள் எவ்​வித நட​வ​டிக்கை எடுக்​கா​மல் உள்​ள​னர் என்ற குற்​றச்​சாட்​டும் உள்​ளது.​ ​
சென்னை மாந​க​ரின் சரக்கு வாகன நெரி​ச​லைக் குறைக்​கும் வகை​யில் ஜார்ஜ் டவுன்,​​ வால்​டாக்ஸ் சாலை உள்​ளிட்ட இடங்​க​ளில் இயங்கி வந்த லாரி ஏஜென்​சி​களை புற​ந​க​ருக்கு மாற்ற சென்னை பெரு​ந​கர வளர்ச்​சிக் குழு​மம் ​(சி.எம்.டி.ஏ)​ 1986-ல் திட்​டத்தை அறி​வித்​தது.​
இதன்​படி 1992-ல் மாத​வ​ரத்​தில் சுமார் 100 ஏக்​க​ரில் ரூ.​ 6 கோடி செல​வில் சரக்கு வாகன முனை​யம் திறக்​கப்​பட்​டது.​ லாரி​கள் நிறுத்​து​மி​டம்,​​ சரக்​கு​களை ஏற்றி இறக்​கும் வச​தி​கள்,​​ பழுது நீக்​கும் மையங்​கள்,​​ 194 ஏஜென்சி அலு​வ​லங்​கள்,​​ மின் நிலை​யம்,​​ தபால் அலு​வ​ல​கம்,​​ தொலை​பேசி இணைப்​ப​கம்,​​ எடை​மேடை,​​ பெட்​ரோல் நிலை​யங்​கள்,​​ குடி​நீர்,​​ கழிப்​பறை,​​ ஓய்​வ​றை​கள் என அனைத்து வச​தி​க​ளும் நிரம்​பி​ய​தாக திட்​டம் அறி​விக்​கப்​பட்​டது.​ இதைத் தொடர்ந்து 75 சத​வீத ஏஜென்​சி​கள் தங்​கள் அலு​வ​லகங்​களை இங்கு மாற்​றி​னர்.​ ​
இத்​திட்​டம் தொடங்​கப்​பட்டு 20 ஆண்​டு​களை நெருங்​கும் நிலை​யில் சரக்கு முனை​யம் செயல்​ப​டும் விதம் அனைத்து தரப்​பி​ன​ரை​யும் அதி​ருப்தி அடை​யச் செய்​துள்​ளது.​ ​

சாலை​கள் கூட சரி​யில்லை:​

முனை​யத்​திற்கு செல்​லும் வழி​யெல்​லாம் குழி​க​ளும்,​​ பள்​ளங்​க​ளு​மாக உள்​ளன.​ இதில் கன​ரக வாக​னங்​கள் செல்​வ​தில் கடும் சிர​மம் ஏற்​ப​டு​கி​றது.​ எங்கு பார்த்​தா​லும் மழை நீர்,​​ சாக்​கடை நீர் தேங்கி கொசு வள​ரும் குட்​டை​க​ளா​கக் காட்சி அளிக்​கின்​றன.​ வாகன நிறுத்​தும் இட​மாக அறி​விக்​கப்​பட்ட இடத்​தில் இப்​போது முள் செடி​கள் நிறைந்து புத​ராக ​ மாறி​விட்​டன.​ ​ ​
திட்​டம் துவக்​கப்​பட்​ட​போது அமைக்​கப்​பட்ட கழிப்​பி​டங்​கள்,​​ ஓய்வு அறை​கள் எல்​லாம் இருந்த இடம் தெரி​யா​மல் போய்​விட்​டன.​ பொது குடி​நீர் வசதி இல்லை.​ மேலும் இங்கு அலு​வ​ல​கம் தொடங்​கிய ஏஜென்​சி​க​ளில் பெரும்​பா​லா​னோர் ஜார்ஜ் டவுன் பகு​திக்கே மீண்​டும் சென்​று​விட்​ட​னர்.​ ​ ​

100 ஏக்​க​ரில் 45 ஏக்​க​ரில் மட்​டும் முனை​யம்:​

முனை​யத்​தின் ​ தற்​போ​தைய அவ​ல​நி​லைக்​கான கார​ணங்​கள் குறித்து மாத​வ​ரம் சரக்கு வாகன முனைய நல சங்​கத் தலை​வர் எம்.வாசு​தே​வன் கூறி​யது:​ ​
திட்​டம் அறி​விக்​கப்​பட்​ட​போது கூறிய கவர்ச்​சி​க​ர​மான உறு​தி​மொ​ழி​களை நம்பி இங்கு வந்​தோம்.​ ஆனால் கடந்த 18 ஆண்​டு​க​ளாக சாலை​கள்,​​ வடி​கால் உள்​ளிட்ட கட்​ட​மைப்பு வச​தி​க​ளைப் பெறு​வ​தற்கே போராடி வரு​கி​றோம் என்​பதே உண்மை.​
இத்​திட்​டத்​திற்​காக ஒரு சென்ட் நிலம் ரூ.​ 300 என்ற குறைந்த விலை​யில் 100 ஏக்​கர் நிலம் பொது​மக்​க​ளி​ட​மி​ருந்து கைய​கப்​ப​டுத்​தப்​பட்​டன.​ ஆனால் 45 ஏக்​க​ரில் மட்​டுமே திட்​டம் முத​லில் துவக்​கப்​பட்​டது.​
அது​வும் 13 ஏக்​கர் நிலம் மட்​டுமே லாரி ஏஜென்​சி​க​ளுக்கு ஒதுக்​கப்​பட்​டன.​ மீத​முள்ள நிலத்​தில் பெரும்​ப​குதி வணிக நோக்​கத்​தின் அடிப்​ப​டை​யில் விற்​பனை செய்​யப்​பட்​டன.​ இதன்​மூ​லம் இத்​திட்​டத்​துக்கு அரசு செல​விட்ட ​ரூ.​ 6 கோடிக்​கும் மேல் அப்​போதே லாபம் கிடைத்​து​விட்​டது.​ ​ ​
இது​வரை ரூ.​ 15 கோடிக்கு நிலங்​கள் விற்​கப்​பட்​டுள்​ளன.​ மேலும் ரூ.​ 20 கோடி மதிப்​புள்ள நிலத்தை வணிக நோக்​கில் விற்க தற்​போது முயற்சி மேற்​கொண்டு வரு​கின்​ற​னர்.​ இதனை எதிர்த்து கடு​மை​யாக போராடி வரு​வ​தால் விற்​பனை சற்று தாம​தம் அடைந்​துள்​ளது.​

மு​னை​யத்​தில் வாக​னங்​களை அனு​ம​திக்க நுழை​வுக் கட்​ட​ணம் வசூ​லிக்க டெண்​டர் அறி​வித்​தது.​ 7 ஆண்​டு​கள் டெண்​ட​ரில் யாரும் பங்​கேற்​காத வகை​யில் தடுத்து ​போரா​டி​னோம்.​ ஆனால் 2000-ம் ஆண்​டில் தனி​யார் ஒரு​வர் ஆண்​டுக்கு ரூ.​ 39 லட்​சம் என டெண்​டர் எடுத்​தார்.​ ​
இதனை அடுத்து டெண்​ட​ரில் எங்​கள் சங்​கமே கலந்து கொண்டு எடுத்​தோம்.​ கடந்த ஆண்​டு​கூட ரூ.​ 69 லட்​சம் செலுத்தி விட்​டோம்.​ மேலும் கட்​ட​மைப்பு வச​தி​களை செய்து தரு​வ​தாக அதி​கா​ரி​கள் உறுதி அளித்​ததை அடுத்து சி.எம்.டி.ஏ-​விற்கு ரூ.​ 2 கோடி செலுத்​தி​னோம்.​ இப்​பி​ரச்​னை​கள் குறித்து மாத​வ​ரம் நக​ராட்​சியை அணு​கிய போது சாலை​க​ளைச் செப்​ப​னிட தங்​க​ளால் இய​லாது என கூறி​விட்​ட​னர் என்​றார் வாசு​தே​வன்.​

இன்​னொரு முனை​யம்?​​ ​

இந்​நி​லை​யில் கரு​ணா​க​ரன் சேரி,​​ அன்​னம்​பேடு உள்​ளிட்ட கிரா​மங்​க​ளில் சுமார் 120 ஏக்​கர் நிலம் கைய​கப்​ப​டுத்தி அங்கு சர்​வ​தேச தரத்​தில் சரக்கு வாகன முனை​யம் அமைக்க ​உள்​ள​தாக சி.எம்.டி.ஏ.​ முடிவு செய்​துள்​ள​தா​கச் செய்தி வெளி​யாகி உள்​ளது.​ ​
முத​லில் மாத​வ​ரத்தை சீர்​ப​டுத்​துங்​கள்.​ பிறகு கரு​ணா​க​ரன் சேரி செல்​ல​லாம் என்​பதே இத்​து​றை​யில் உள்​ளோ​ரின் கருத்​தாக உள்​ளது.​

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...