Tuesday, May 11, 2010

பெற்​றோர் வயிற்​றில் பால்

Dinamani Editorial on May 11, 2010:

தமிழ்​நாட்​டில் தனி​யார் பள்​ளி​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளின் பெற்​றோர் அனை​வ​ருக்​கும் மகிழ்ச்​சி​யா​ன​தா​க​வும்,​​ ஒரு விடி​ய​லைக் காட்​டி​ய​தா​க​வும் அமைந்த செய்தி-​ இரு நாள்​க​ளுக்கு முன்பு,​​ தனி​யார் பள்​ளி​க​ளில் கட்​ட​ணத்தை நிர்​ண​யித்து அரசு வெளி​யிட்ட அறிக்​கை​தான்.​ ​

அறிக்​கை​யோடு நின்​று​வி​டா​மல்,​​ தற்​போது தமிழ்​நாட்​டின் பெரும்​பா​லான கல்வி மாவட்​டங்​க​ளில் அந்​தந்த முதன்​மைக் கல்வி அலு​வ​லர் மூல​மாக ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​டண விவ​ரக் கடி​தம் வழங்​கப்​பட்டு வரு​கி​றது என்​பது மேலும் மகிழ்ச்​சி​யூட்​டு​வ​தாக இருக்​கி​றது.​

கல்​விக் கட்​ட​ணத்தை நிர்​ண​யம் செய்ய,​​ நீதி​பதி கே.​ கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட கமிட்டி,​​ இந்​தக் கட்​ட​ணத்தை மிக​வும் சரி​யா​க​வும்,​​ நியா​ய​மா​க​வும் நிர்​ண​யித்​துள்​ளது என்​ப​தில் எந்​த​வி​த​மான மாற்​றுக் கருத்​துக்​கும் இட​மில்லை.​ ஏனெ​னில்,​​ ​ இந்​தக் கட்​ட​ணங்​கள் அனைத்​தும் அறி​வி​யல்​பூர்​வ​மாக,​​ ஒவ்​வொரு பள்​ளிக்​கு​மா​கத் தீர்​மா​னிக்​கப்​பட்​டவை என்​ப​து​தான் இதன் சிறப்பு.​

ஒவ்​வொரு பள்​ளி​யும் கொண்​டி​ருக்​கும் இடத்​தின் பரப்​ப​ளவு,​​ கட்​ட​டங்​க​ளின் அளவு,​​ உள்​கட்​ட​மைப்பு வசதி,​​ தள​வாட வச​தி​கள்,​​ ஆய்​வுக்​கூ​டம்,​​ நூல​கம்,​​ பணி​யா​ளர்,​​ ஆசி​ரி​யர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்​றைக் குறித்து அந்​தந்​தப் பள்​ளி​யி​ட​மி​ருந்து தக​வல் பெற்று அளிக்​கு​மாறு,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் உள்ள முதன்மை கல்வி அலு​வ​ல​ருக்கு ஒரு படி​வத்தை இக்​க​மிட்டி வழங்​கி​யது.​ இந்​தப் படி​வங்​களை 10,934 பள்​ளி​கள் பூர்த்தி செய்து தந்​தன.​ 701 பள்​ளி​கள் இப்​ப​டி​வங்​களை இது​வரை பூர்த்தி செய்து தரவே இல்லை.​

இந்​தக் கமிட்டி செய்த மிக நல்​ல​தொரு செயல்,​​ இவர்​கள் தந்த விவ​ரங்​க​ளைக் கொண்டு,​​ அப்​பள்​ளிக்கு ஓராண்​டுக்கு எவ்​வ​ளவு செல​வா​கக்​கூ​டும் என்று கணக்​கிட்டு,​​ அதில் பள்ளி நடத்​தும் தாளா​ள​ருக்​கும் இழப்பு இல்​லாத வகை​யில் ஒரு விகி​தா​சார லாபத்​தைச் சேர்த்து,​​ அதை அந்​தப் பள்​ளி​யின் மாண​வர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப கல்​விக் கட்​ட​ணங்​களை வகுத்து அளித்​துள்​ள​னர்.​

இந்த நடை​முறை செல​வி​னக் கணக்​கின் அடிப்​ப​டை​யில்,​​ அதி​க​பட்​ச​மாக மேனி​லைப் பள்​ளி​யில் ரூ.​ 11,000,​ உயர்​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 9 ஆயி​ரம்,​​ நடு​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 8 ஆயி​ரம்,​​ தொடக்​கப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 5 ஆயி​ரம்,​​ கிரா​மத் தொடக்​கப்​பள்​ளிக்கு ரூ.3,500 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு அறி​விக்​கப்​பட்​டது.​ இத​னால் பெற்​றோர் அடைந்த மகிழ்ச்​சிக்கு அளவே இல்லை என்று சொல்​ல​லாம்.​

ஆனால்,​​ நாம் எதிர்​பார்த்​த​தைப் போலவே தனி​யார் பள்​ளி​கள் அர​சின் இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெறும் முயற்​சி​யில் இறங்​கி​விட்​டன.​ இதற்​காக அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளி​ட​மும் சந்தா நிலுவை வசூல் படு வேக​மாக நடந்து வரு​கி​றது.​

அர​சின் கட்​ட​ணத்தை எதிர்க்​கும் பள்ளி நிர்​வா​கி​கள் சொல்​லும் கார​ணம்,​​ இந்​தக் கட்​ட​ணம் எங்​க​ளுக்​குக் கட்​டுப்​ப​டி​யா​காது என்​ப​து​தான்.​ இந்​தப் பள்​ளி​கள் கொடுத்த வரவு,​​ செலவு கணக்​கு​க​ளின் அடிப்​ப​டை​யில்​தான் இந்​தக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​ அப்​ப​டி​யெ​னில் அந்​தப் பள்​ளி​கள் தவ​றான அல்​லது பொய்​யான தக​வல்​க​ளைப் படி​வங்​க​ளில் பூர்த்தி செய்து தந்​த​னவா?​ ​ இவர்​கள் பல்​வேறு தலைப்​பு​க​ளின் கீழ் வாங்​கும்,​​ மறை​வு​வ​ரு​வாய் குறித்து இக்​க​மிட்​டி​யின் படி​வத்​தில் பூர்த்தி செய்து தர இய​ல​வில்லை என்​று​தானே பொருள்?​ ​

அரசு வெறு​மனே கல்​விக்​கட்​ட​ணம் அறி​விக்​கும்;​ நாம் வழக்​கம்​போல அதை பல வகை​யில் அதி​க​ரித்​துக் கொள்​ள​லாம் என்ற எண்​ணத்​து​டன் தனி​யார் பள்​ளி​கள் இருந்​தன.​ ஆனால்,​​ அரசு தற்​போது அறி​வித்​துள்ள நிபந்​த​னை​க​ளின்​படி,​​ எந்​தெந்த தலைப்​பு​க​ளின் கீழ் கட்​ட​ணம் வாங்​கி​னா​லும்,​​ மொத்​தக் கட்​ட​ணம்,​​ மேனி​லைப் பள்​ளிக்கு ரூ.​ 11 ஆயி​ரத்​தைத் தாண்​டக்​கூ​டாது என்​ப​து​தான் இவர்​க​ளுக்​குப் பெரும் இடை​யூ​றாக இருக்​கி​றது.​

இது​நாள்​வரை எல்​கேஜி-​க்கும்​கூட கணினி கட்​ட​ணம்,​​ நூல​கக் கட்​ட​ணம் வசூ​லித்த அக்​கி​ர​மங்​க​ளுக்கு முடிவு ஏற்​பட்​டுள்​ளது.​ இந்​தப் புதிய முறை,​​ தனி​யார் பள்​ளிக்கு மிகப் பெரும் கடி​வா​ள​மாக இருக்​கி​றது.​ ஆகவே இப்​போது இதை எதிர்க்​கி​றார்​கள்.​ நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெற முயல்​கி​றார்​கள்.​

விடு​திக் கட்​ட​ணம்,​​ பள்​ளிப் பேருந்​துக் கட்​ட​ணம் ஆகி​ய​வற்​றில் அரசு தலை​யி​டாது என்று அறி​வித்த போதி​லும்,​​ இத​னால் கிடைக்​கும் வரு​வாய் சில பள்​ளி​க​ளுக்கு மட்​டுமே கிடைக்​கி​றது.​ எல்​லாத் தனி​யார் பள்​ளி​க​ளி​லும் பேருந்​து​கள் இருந்​தா​லும்,​​ விடு​தி​கள் கிடை​யாது.​ எனவே அதி​கம் சம்​பா​திக்க வழி இல்​லா​த​தால் இந்த எதிர்ப்பை முன்​வைத்​துள்​ள​னர்.,​​

இந்​தக் கட்​ட​ணம் கட்​டுப்​ப​டி​யா​காது என்று இப்​பள்​ளி​கள் கரு​தி​னால்,​​ தங்​கள் பள்​ளி​களை அர​சுக்கு ஒப்​ப​ளித்​து​விட்டு,​​ ஒதுங்​கிக்​கொள்ள வேண்​டும்.​ அல்​லது இவ்​வாறு பணிய மறுத்து,​​ தமிழ்ச் சமு​தா​யத்​தில் கல்​விச் சூதாட்​டத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கத் தடை​யாக இருக்​கும் இந்​தக் கல்வி நிறு​வ​னங்​களை அரசே ஏற்க முன்​வர வேண்​டும்.​

ஒவ்​வொரு பள்​ளிக்​கும் தனித்​த​னி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கல்​விக் கட்​ட​ணங்​கள் ​ குறித்து www.pallikalvi.in​ என்ற முக​வ​ரி​யில் வெளி​யி​டப்​ப​டும் என்று அரசு குறிப்​பிட்​டுள்​ளது என்​றா​லும்​கூட,​​ ஒவ்​வொரு தனி​யார் பள்​ளி​யும் தங்​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​டண விவ​ரத்தை பள்​ளிக்​கூட வாச​லில் மக்​கள் பார்​வை​யில்​ப​டும்​வ​கை​யில் வைக்க வேண்​டும் என்று பள்​ளிக் கல்​வித் துறை உத்​த​ர​விட வேண்​டும்.​ அதைக் கடு​மை​யாக நடை​மு​றைப்​ப​டுத்​த​வும் வேண்​டும்.​ நீண்​ட​கா​ல​மாக இருந்த நடுத்​தர மக்​க​ளின் மனக் குமு​ற​லுக்கு துணி​வு​டன் முற்​றுப்​புள்ளி வைத்​தி​ருக்​கும் தமி​ழக அரசை எவ்​வ​ளவு பாராட்​டி​னா​லும் தகும்.​ எந்​த​வித நிர்​பந்​தங்​க​ளுக்​கும் அடி​ப​ணி​யா​மல் இந்​தக் கல்வி கட்​டண முறையை அரசு நடை​மு​றைப்​ப​டுத்த வேண்​டும் என்​ப​தும்,​​ தனி​யார் பள்​ளி​கள் நீதி​மன்​றத்​தின் தடை உத்​த​ர​வைப் பெற்​று​வி​டா​வண்​ணம் அரசு முனைந்து செயல்​பட வேண்​டும் என்​ப​தும் நமது வேண்​டு​கோள்.​

தவ​றுக்​குத் துணை​போ​கா​மல் மக்​கள் மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் அர​சுக்கு ஆத​ர​வா​கத் துணை நிற்​பது அவ​சி​யம்.​
Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=239987&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...