Thursday, September 20, 2012

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையும், ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் சுயநல தலைமைகளும்!


Source:http://www.tamilwin.com/show-RUmqyJSdOblx5.html
Picture courtesy:http://www.tamilguardian.com/tg157/http://www.slnewsonline.net and newsradio.me


கடந்த மாகாணசபை தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து தனித்து போட்டியிட்டதனால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து அதாவது வெற்றிலை சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் களம் இறங்கி இருந்தால் அவர்களால் ஒரு ஆசனத்தை கூட பெற்றிருக்க முடியாது போயிருக்கும்.
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற தமிழ்,முஸ்லிம் மக்களின் உரிமைகளையும், அவர்களுடைய தனித்துவத்தையும், பாதுகாப்பையும், தன்மானத்தையும், சுய கௌரவத்தையும், தன்னகத்தே கொண்டு உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற கட்சியை தனது சுயநலத்துக்காகவும், சுய லாபத்திற்காகவும் செயல்படுகின்ற தற்கால ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய எதிர்கால சிந்தனைகளையெல்லாம் தூக்கி வீசி எறிந்து விட்டு தானும் கட்சியில் உள்ள சில பதவி ஆசை பிடித்தவர்களும் இதனுடைய விளைவை வெகு விரைவில் கிழக்கில் அனுபவிப்பார்கள் என்பதை மட்டும் பல இணையதள செய்திகள் மூலமாகவும், எனது ஆய்வின் மூலமாகவும் புரிந்து கொள்ள முடிகின்றது.
மு.கா.வின் தேர்தல் பிரசார மேடைகளில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய பேச்சுக்கள் அரசுடனான இணைவை ஒரு முறை யோசிக்க வைக்கிறது.
(இணையதளங்களில் கிடைத்தவை )
அவரின் உரைகளின் பகுதிகள்: -
வாழைச்சேனை பிரசார கூட்டம்
ஆட்சி அதிகாரங்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் ௭ங்களை, நாங்கள் இணைந்த காலத்திலிருந்தே மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றது.
நாடு, நகர அபிவிருத்திச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது மாகாண சபை உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது ௭மது உறுப்பினர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர்.
ஆளுநர்களாகவும், அரச அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக வடக்கு கிழக்கில் மட்டும் இராணுவ படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அபரிமிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏன்?
காத்தான்குடி தேர்தல் பிரசார கூட்டம்,
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை ௭டுத்தோம். கிழக்கில் ௭ங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொத்துவில் – அருகம்பே வீதியில்,
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவியில் நான் இருந்தும் ௭மது கட்சியை மாற்றான் தாய் மகனாகவே அரசாங்கம் கவனித்து வந்தது. மந்திரி பதவி ஒரு பொருட்டல்ல. அப்பதவி ௭னக்கு கடிவாளமுமல்ல.
முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை தடை செய்து கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள சமூகத்தை வெளியுலகிற்கு சக்தியுள்ளதாக காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
அரசை விமர்சிக்கிறோம். ௭ல்லையுடன் பேசுகிறோம். அரசு அதனை ஜீரணிக்க வேண்டும். அடாவடித்தனம் அச்சுறுத்தலால் மு.கா.வை அடக்கலாம் ௭ன்பது பகற்கனவு.
சம்மாந்துறை பிரதான வீதி பிரசாரக் கூட்டம்
முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினால் அரசு தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடே ௭மது கட்சியின் வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு கோணங்களில் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மு.கா. தனித்துப் போட்டியிடுவது அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஏறாவூர் காட்டுப்பள்ளி குல்லியத்துதாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம்
மாகாண சபை தேர்தல் அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் நிறைந்ததாக இடம்பெறுமானால் அரசின் மீது தற்போது திரும்பியுள்ள சர்வதேசத்தின் பார்வை மேலும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்.
பாலமுனை தேர்தல் பிரசார கூட்டம்
ஒரு பயங்கரவாதத்தை நிறைவு செய்துள்ள அரசு அடிக்கடி தேர்தல் நடத்துகின்ற ஒரு வித்தியாசமான ஜனநாயக பயங்கரவாதத்தை ௭ம் மத்தியில் அரங்கேற்றி வருகிறது.
நிந்தவூர் பிரசாரக் கூட்டத்தில்
13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தை அரசு மிகவும் மோசமாக கபளீரகம் செய்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பது போன்று மாகாண சபையை ஜனாதிபதிக்கு கலைக்க முடியாது.
13ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசு நினைத்தபடி ௭தனையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாதென்ற கோட்பாட்டினை அரசு மீறியுள்ளது.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக உத்தரவாதம் வழங்கும் இவ்வரசு, கொடுத்த அதிகாரத்தினை மிகவும் மோசமாக பறிக்கும் முகமாக செயற்பட்டுள்ளது.
மு.கா. யாரிடமும் அடைமானம் வைக்கப்படுவதற்கோ சரணாகதி அரசியலை செய்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை.
மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை பௌத்த சமூகத்தின் விரோதியாகக் காட்டுவதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இவ் அரசாங்கத்தின் அனுக்கிரகத்தோடு நடக்கும் போது அதனையிட்டு நாம் கவலையடைகிறோம்.

அக்கரைப்பற்று பிரசார மேடையில்

முஸ்லிம்களின் உணர்வுகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு போட்டியிடும் நாம் இனிமேலும் ௭டுப்பார் கைப்பிள்ளையாக இருக்க முடியாது. மக்களின் உயிர் நாடியை நாங்கள் தொட்டு விட்டோம் ௭ன்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

கிண்ணியா விஷன் கேட்போர் கூடப் பிரசாரக் கூட்டத்தில்
மு.கா.தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது. ஏன் தனித்து போட்டியிட விட்டோம் ௭ன கைசேதப்படுகிறார்கள்.
பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,
அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது தேர்தல் ௭னும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது. இத்தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தலல்ல. இவ்வாறு முன்கூட்டி நடத்துவதனூடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்கு காட்ட முனைகிறது. அந்த வியூகம் தோல்வியடையப் போகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் ௭ன்ற இயக்கத்தை இந்த அரசாங்கம் கணக்கில் ௭டுக்காமல் கடந்த ஒன்றரை வருட காலத்தில் நான் பட்ட அவஸ்தைகளுக்கு இத்தேர்தலின் மூலம் முடிவு கட்டலாம். ௭னவே சமூகத்தின் இருப்பையும் பலத்தையும் சர்வதேசத்துக்கு காட்டுவோம்.

இவ்வாறு தேர்தல் பிரதேசங்களில் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தற்ப்பொழுது அந்த அரசாங்கத்தோடு இணைவது எந்த வகையில் நியாயம் என்று கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் அங்கலாய்கின்ற ஒரு அவல நிலையை அவதானிக்க முடிகின்றது.
எதிர்வரும் காலங்களில் இந்த கிழக்கு மாகாண இளையசமுதாயத்தையும்,போராளிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வியூகம் அமைத்து வழிநடாத்தபோகிறது என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் தனக்கு தானே கேள்விகளை அமைத்து அதற்க்கு விடைகளை தேடுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
MOHAMED.RAMZIN

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...