Wednesday, February 9, 2011

CHENNAI CORPORATION Mayor to contest from Saidapet?



By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on February 9, 2011:
CHENNAI: With the date for the Assembly elections expected to be announced in the next three or four weeks, there are strong rumours that Mayor M Subramanian may contest from Saidapet.
According to sources, DMK chief and Chief Minister M Karunanidhi, during a recent performance appraisal of party leaders, acknowledged Subramanian’s active work as a Mayor. 
Besides the blessings of Deputy Chief Minister M K Stalin, Subramanian also enjoys a good reputation among the city residents, especially in Saidapet, for his active work as the Mayor.
While holding a powerful position as the Youth Wing’s deputy secretary in the DMK (under Deputy CM M K Stalin who is the Youth Wing secretary), Subramanian was elected to the Corporation Council as its member since 1996 from Saidapet.
In 1996, he successfully contested from Ward 135 (Saidapet-West) and was re-elected to the Council in 2001 as well. As Ward 135 was reserved for women in 2006, he moved to Ward 140 (Guindy-West) and won from there. Besides his stint as a councillor over these years, Subramanian contested a by-election in Saidapet in May 2002, where he lost to AIADMK’s Radha Ravi by a margin of 11,925 votes.
While not denying anything on his candidature from Saidapet, Subramanian said, “Nothing has been decided. It has to be finalised by the party’s top leaders, Kalaignar and Thalapathi. If they ask me, I will oblige.”
As per the final electoral rolls, Saidapet Assembly segment has 2.1 lakh voters. Since the term of the incumbent Corporation Council would end in another eight months (October), he is very much likely to be in the fray in Saidapet constituency.

Monday, February 7, 2011

CHENNAI: CBI hands tied on tainted ex-Port chief


                       M K Sinha, Deputy Conservator of ChPT,
                 G J Rao (then deputy chairman of ChPT and now chairman of Paradip Port Trust)
K Suresh (former chairman of ChPT and now principal secretary, Public Undertaking & Mining Corporation in Madhya Pradesh)
By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on February 7, 2011:
CHENNAI: Cases filed by the Central Bureau of Investigation aga inst former Chairman of Chennai Port Trust K Suresh and two other officials for allegedly causing a loss of Rs 20 crore to the Port Trust in August 2009 have not reached their logical conclusion due to delay the central government in giving the sanction to prosecute them.
According to the CBI website, the sanction for prosecution against K Suresh (former chairman of ChPT and now principal secretary, Public Undertaking & Mining Corporation in Madhya Pradesh), G J Rao (then deputy chairman of ChPT and now chairman of Paradip Port Trust) and M K Sinha, Deputy Conservator of ChPT, were pending with the central government since November 16 last year.
While the permission to prosecute Suresh must come from the Department of Personnel and Training, which comes under the watch of Prime Minister Manmohan Singh, it is the Ministry of Shipping, headed by G K Vasan, that must deal with Rao and Sinha.
The CBI, after conducting extensive raids in August 2009, had registered cases against them under different sections of the Prevention of Corruption Act, 1988 for causing a loss of Rs 20 crore to the Chennai Port Trust by allegedly entering into a criminal conspiracy with a Singapore firm. The officials were accused of abusing their official position to allot a berth in the Chennai Port on April 11, 2007 to a non-functional ship, M V San Giorgio, which had to be towed in to the harbour.
Besides recovering gold bars from Suresh’s bank lockers, CBI officials had seized documents of prop erties and a huge bank balance totalling Rs 2.36 crore (including $6,443) from his official residence.




3 years on, dead ship still at Chennai Port


CHENNAI: Chennai Port Trust’s (ChPT) former chairman K Suresh landed in the CBI net mainly because he allegedly allowed a ‘dead’ ship, MV San Giorgio, carrying 12,800 cubic metres of expensive teak worth over Rs 10 crore, to dock in the harbour, causing a loss of Rs 20 crore to the port.
According to the CBI, Suresh along with then deputy chairman of ChPT G J Rao and ChPT deputy conservator M K Sinha abused their positions and allotted a berth in the Chennai Port to MV San Giorgio, despite knowing it did not have valid documents; its licenses had expired; and  had no crew. It was carrying cargo of Singapore-based Olam International Limited from the Overndo Port, West Africa to Tuticorin Port. 

It was actually towed in as it had developed a snag mid-way. With the Tuticorin Port refusing permission citing its unseaworthy condition, it was towed into  Chennai Port and berthed at WQ1 bay on April 17, 2007. 
The ship was expected to deliver the cargo at Tuticorin but its original owners, Sandele Navigation Corporation, sold it to Exclusive Marine Inc midway. So, the cargo owners towed it to Port Victoria,  Seychelles, where a dispute broke out between the crew and the ship owners, who also got into a legal tangle with the financier bank, which obtained an order of attachment from. But Olam International filed an intervening application. Over three-and-a-half years later, it’s still at Chennai Port.

Saturday, February 5, 2011

TAMIL NADU: 'Marginal farmers situation worsening'


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on February 5, 2011:
CHENNAI: Issuing an early warning about the worsening situation of marginal farmers in the State, the Tamil Nadu Farmers Party, on Friday, warned that the farmers in the State were passing through a difficult phase and the situation would get much worse, even driving them to commit suicide, if the summer rains failed.
Speaking to reporters here, K Ramarajan, state president, said that marginal farmers in the state who were already affected by dearth of hands for work in the fields, due to the National Rural Employment Guarantee scheme and the emergence of women self-help groups, were now suffering more due to the heavy floods caused a few months ago.
The state government did not adequately compensate the marginal farmers who lost their crops during the floods, he said.
Most of these marginal farmers now have borrowed huge sums from lenders with a hope to repay it during the next harvest, the party state president said.
"If the next harvest also fails, due to poor rain or for any other reason, just think about the state of the mind of marginal farmers. The situation would be explosive, much worse than what it is in Maharashtra," he warned.
According to an estimate, marginal farmers were spending Rs 30,000 per acre to grow crops like cotton, chilies, paddy and corn but the yield for most part remained the same or lower in money terms.
The Tamil Nadu Farmers Party has about two lakh members, with a majority of them from Perambalaur, Tiruchy, Tanjavur, Pudukottai, Tirunelveli, Sivagangai, Ramanathapuram, Erode, Coimbatore, Theni and Villupuram districts.

"தினமலர்' செய்தி எதிரொலியால் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை


Source:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=181019

சென்னை:"தினமலர்' செய்தி எதிரொலியாக, மேடவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 300 மாணவர்களுக்கு நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது.
சென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 1,446 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், பல கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால், மாணவ, மாணவியர் பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் காணப்பட்டது. 
 
இதுகுறித்து, தினமலர் நாளிதழ், நேற்று, படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், வட்டார வளர்சி அலுவலர் மற்றும் சேப்பாக்கம் சமூக நலத்துறை இயக்குனர் ஆகியோர் பள்ளியை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு உடனடியாக சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பள்ளியின் அருகில் உள்ள துவக்கப்பள்ளியில் இருந்து தற்காலிகமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. 
முதற்கட்டமாக, 300 மாணவர்களுக்கு, நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது. தட்டுகள் வழங்க முடியாத காரணத்தால்,பேப்பர் தட்டில் உணவுகள் வழங்கப்பட்டது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,"மேடவாக்கம் அரசு பள்ளியில் இன்று முதல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும்.தற்காலிகமாக பத்து நாட்களுக்கு அருகில் உள்ள துவக்கப் பள்ளியில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பின், பள்ளி வளாகத்திலேயே சமைத்து நிரந்தரமாக வழங்கப்படும். தற்போது 300 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 667 மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க கோரியுள்ளனர். அவர்களுக்கும் வழங்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்,' என்றனர்.
பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி: மேடவாக்கம், அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு நேற்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டதை அடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் "தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "மாணவர்களுக்கு சத்துணவு வழங்க கடந்த மூன்று வருடங்களாக கல்வித் துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. தற்போது "தினமலர்' செய்தி எதிரொலியாக மாணவர்களுக்கு மதிய உணவு கிடைத்துள்ளது,' என்றனர்.

Friday, February 4, 2011

அதிகாரிகள் அலட்சியம்: ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் மாணவர்கள்


-ஆர்.சீனிவாசன் 

சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர், மதிய உணவு கிடைக்காமல், பசியுடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.

சென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 697 மாணவர்கள், 749 மாணவியர் என, 1,446 பேர், கல்வி பயில்கின்றனர்.
சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட, பல கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்களின் மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளி, 2005ம் ஆண்டு வரை, நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், பின், வெளியில் சென்று படிக்க முடியாததால், மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் அவர்கள் கல்வி தடைபட்டது. இது குறித்து, "தினமலர்' நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது. அதன் பலனாக, அப்பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து கிடைத்தது. இதனால், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்தது. மேலும், பள்ளி ஆசிரியர்களின் திறமையால், அப்பள்ளியின் தேர்ச்சி சதவீதமும் உயர்ந்தது.

கடந்தாண்டு, 10ம் வகுப்புத் தேர்வில், இப்பள்ளி, 98 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர், கூலித் தொழில் மற்றும் விவசாயம் பார்த்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்படுகிறது. 
இது தொடர்பாக, பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பலர், மதிய உணவு சாப்பிடாமல், பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் உள்ளது. மதிய உணவு உண்ணாததால், பலர், வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

பாதிக்கப்படும் மாணவ, மாணவியர் கூறுகையில், "எங்களின் பெற்றோர், கூலித் தொழில் பார்த்து வருகின்றனர். அதனால், பெரும்பாலான நாட்கள், மதிய உணவு எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், நாங்கள், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியுள்ளது. "இதனால், ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம். அந்நேரம் எங்கள் வீட்டில் உணவு தயாராக இருக்காது. மதிய இடைவேளையின் போது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வரவும் நேரம் இருக்காது. "இதனால், சக மாணவ, மாணவியர் கொண்டு வரும் உணவை பகிர்ந்துக் கொள்வோம். எங்களுக்கு மதிய உணவு அளித்தால், நாங்கள் படிக்க உதவியாக இருக்கும்' என்றனர். பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலானோர் மதிய உணவு சாப்பிட விரும்புகின்றனர். அவர்களிடம் கையெழுத்து வாங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம்.

"பள்ளியிலேயே சத்துணவு தயாரிக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் நிதியில், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுக்கூடம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சத்துணவிற்கான அனுமதி கிடைக்கவில்லை. "இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிய உணவு கிடைத்தால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்' என்றனர். மேடவாக்கம் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரின் பசி உணர்வுகளை புரிந்து கொண்டு கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் உடனடி நடவடிக்கை எடுத்தால், பசியின் கொடுமையில் இருந்து மாணவர்களுக்கு விமோசனம் பிறக்கும்.

கையேந்தும் கொடுமை: மேடவாக்கத்தில் உள்ள யாகவா முனிவர் வீட்டில், ஒவ்வொரு வியாழக் கிழமையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு கையேந்தி, மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதேபோல், பள்ளியிலிருந்து 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் வாங்கி உண்டு, மாணவர்கள் தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றனர். மாணவர்களை, ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் கொடுமையில் இருந்து மீட்க, கல்வித் துறையின் கண் திறக்க வேண்டும்.

Wednesday, February 2, 2011

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்



தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. 
இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. 
இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?

கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.
தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.

* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.

* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.

* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.

* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.

* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.

* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.
இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

-பா.பாஸ்கர்பாபு-

Saturday, January 29, 2011

துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரி கூடுதல் டி.ஜி.பி.யிடம் மீனவர்கள் மனு


Source: http://www.dinamani.com/
 
சென்னை, ஜன. 28: இலங்கை கடற்படையினரிடமிருந்து தற்காத்துக் கொள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணனிடம் மீனவர் அமைப்பினர் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.

தென்னிந்திய மீனவர் நலச் சங்கம், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு மீனவர் மக்கள் பேரவை ஆகிய மூன்று மீனவர்கள் சங்கத்தின் சார்பாக இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவின் விவரம்: பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள்.

இதனால் கடந்த ஆண்டுகளில் பல மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி சூடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

மேலும் மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விசைப்படகுகள், வலைகள், நவீன மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவை இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் படுகாயமடைந்தும், உடல் ஊனமுற்ற நிலையிலும் பல மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், தமிழக காவல்துறையும் உரிய பாதுகாப்பைத் தர இயலவில்லை.

எனவே, தமிழகத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள காரணத்தால், ஒவ்வொரு மீனவருக்கும் தற்காப்புக்காக குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...